search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா தூய்மைப் பணி"

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. ெதாடங்கி ைவத்தார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் கராச்சியில் உள்ள கொண்டபாளையத்தில் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

    இந்த தூய்மைப் பணிக்கு நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி உறுப்பினர் காங்கிரஸ் நகர தலைவர் கோபால், திமுக உறுப்பினர்கள், சிவானந்தம், அருண் ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ெமகா தூய்மை பணியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை தொடங்கி மேலும் இந்த பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர் மோகானசண்முகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • இந்தப் பணி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவிப்பு.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டப சாலை உள்பட பல பகுதிகளில் அன்றாடம் தேங்கும் குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணி முகாம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நடந்தது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அலுவலர் முருகன், கவுன்சிலர் ஆனிரோஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தூய்மைப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் சூழ்நிலையில் பேரூராட்சி பகுதிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் நோக்கத்தில் இந்தப்பணி நாள்தோறும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    ×