search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்"

    • 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் சராசரி விலையாக ரூ. 7750-ற்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 3460 மூட்டைகள், குவிண்டால் 1065.29. இதன் மதிப்பு ரூ.82 லட்சத்து 75 ஆயி்ரத்து 26 ஆகும். 12 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10,888-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150-க்கும் சராசரி விலையாக ரூ.9,050-க்கும் விற்பனையானது.

    பருத்தியின் மொத்த அளவு 4,713 மூட்டைகள், 1534.61 குவிண்டால் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 772 ஆகும். 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என்று திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். 

    • வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
    • 17 வணிகா்கள் கொள்முதல் செய்ய வந்திருந்தனா்.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.12 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 905 விவசாயிகள் 7,618 மூட்டைகளில் 2,536 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 7,250 முதல் ரூ. 10,056 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.8,660. கடந்த வார சராசரி விலை ரூ. 9,680. மொத்தம் ரூ. 2.12 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    ×