search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த தலைவர்"

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடக மாநிலம் கலபுரகி தொகுதியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa
    கலபுரகி:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரசை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். அத்துடன் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பாஜகவில் இணையப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை கட்சி தலைமை சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைத்தது.

    எடியூரப்பாவுடன் உமேஷ் ஜாதவ்

    எனினும், சின்சோலி தொகுதி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென‌ தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர், கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவில் இணைந்தார். அப்போதே அவர் கலபுரகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

    தற்போது வேட்பாளர் தேர்வு நடைபெற்ற வரும் நிலையில், கலபுரகி தொகுதியில் போட்டியிட உமேஷ் ஜாதவுக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான கே.பி.ஷனப்பா கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இன்று அறிவித்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் தலைவர்களை புறக்கணித்துவிட்டு, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.

    மேலும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    இவ்வாறு மாறி மாறி முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி தாவி வருவதால் கலபுரகி தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் காலமானார். அவருக்கு வயது 63. #GurudasKamat
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் குருதாஸ் காமத்(வயது 63). காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உள்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர். தொலைத் தொடர்புத்துறை இணை மந்திரியாகவும், மும்பை காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

    ராகுல் காந்தியுடன் குருதாஸ் காமத்

    இந்நிலையில், குருதாஸ் காமத்துக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக சாணக்யபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.  மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    குருதாஸ் காமத் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரிஜிவாலா, மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat
    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். #AAP #Ashutosh #Resign
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணத்துக்காக தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவர் கூறினார்.

    இது குறித்து அசுதோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “அனைத்து பயணத்துக்கும் ஓர் முடிவு உண்டு. ஆம் ஆத்மி கட்சி உடனான எனது தொடர்பு அழகானது மற்றும் புரட்சிகரமானது. முற்றிலும் தனிப்பட்ட காரணத்துக்காக நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். கட்சிக்கும், எனக்கு முழு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.



    பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்த அசுதோஸ் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டதும், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவியதும் நினைவு கூரத்தக்கது.  #AAP #Ashutosh #Resign
    ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தால் தாம் கட்சியை விட்டு விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான எச்.எஸ் புல்கா தெரிவித்துள்ளார். #Congress #AamAadmiParty
    சண்டிகர்:

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக செயல்படுகின்றன. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய முயற்சி செய்து வருகின்றன.

    இந்த ஒன்றிணையும் திட்டத்துக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தாம் கட்சியை வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.எஸ்.புல்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புல்கா, காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கைக்கோர்த்தால் தாம் கட்சியில் இருந்து விலகும் முதல் நபராக நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். #Congress #AamAadmiParty
    ×