search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி மயங்கி விழுந்து பலி"

    வாலாஜா அருகே வாக்குசாவடி மையத்தில் மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடந்து வருகிறது.

    இந்நிலையில் வாலாஜா அருகே உள்ள அனந்தலை குளத்துதெருவை சேர்ந்தவர் துளசி (வயது 80). இவர் இன்று அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி நடு நிலைபள்ளி மையத்தில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றார்.

    வாக்குசாவடி மையத்தின் உள்ளே சென்ற போது திடீரென மயங்கி விழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே மருமகளுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மூதாட்டி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடை, பெத்தமேலுபள்ளி பகுதியை சேர்ந்தவர் அசோக் சிங். இவரது மனைவி அனுசுயாபாய் (55). இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். 

    இந்நிலையில், நேற்று காலையில் அனுசுயாவிற்கும் அவரது மருமகளுக்கும் குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அனுசுயா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரியில் உளள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அனுசுயா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து புகாரின் பேரில் மகாராஜகடை போலீசார், அனுசுயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×