search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம் எம்எல்ஏ"

    விநாயகர் சதுர்த்தியன்று கணபதியை போற்றி கோஷமிட்டதை கட்சி கண்டித்ததை அடுத்து முஸ்லிம் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார். #vinayagarchaturthi #WarisPathan
    மும்பை:

    அகில இந்திய மஜ்லீஸ்-இ -இத்தேகாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி எம்.எல்.ஏ. வாரிஸ் பதான். இவர் மும்பையில் பைகுலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

    சமீபத்தில் அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பேசினார். அப்போது “விநாயகரை வணங்குவதன் மூலம் அவர் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பார். எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிந்து மேன்மைபடுத்துவர் என புகழாரம் சூட்டினார்.

    மேலும் அவர் பேசும் போது, “இன்று நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். கடவுள் விநாயகர் அனைவரது கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்து மகிழ்ச்சி பெற செய்ய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கண்பதி பப்பா மோரியா என்ற வாழ்த்து கோ‌ஷத்துடன் பேசி முடித்தார்.


    இதற்கு ‘ஏ.ஐ.எம்.ஐ.எம்.’ கட்சியை சேர்ந்த அசாதுதீன் ஓவாஸ்சிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எம்.எல்.ஏ. வாரிஸ் பதானின் இத்தகைய செயல் கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். சில முஸ்லிம் மத குருக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ‘கண்பதி பப்பா மோரியா’ என்ன வாழ்த்து கோ‌ஷமிட்ட எம்.எல்.ஏ. பதான் அதற்காக சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்டார். “எனது இந்த தவறுக்காக அல்லா என்னை மன்னிப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான அரவிந்த் சவாந்த் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடவுள் விநாயகரை முஸ்லிம் அரசியல்வாதி வாழ்த்தியதில் தவறு இல்லை. ‘கண்பதி பப்பா மோரியா’ என கூறியதை குற்றமாக கருதக்கூடாது” என தெரிவித்துள்ளார். #vinayagarchaturthi #WarisPathan
    கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #KarnatakaDeputyCM
    பெங்களூரு:

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நாளை கர்நாடக மாநில முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்களும், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.



    முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் நாளை புதிதாக அமையும் மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம். இதுதவிர சில முக்கிய துறைகளுக்கான மந்திரி பதவியும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் என கர்நாடக மாநில காங்கிரசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று எழும்பியுள்ளது.

    இதுதொடர்பாக, கர்நாடக மாநில முஸ்லிம்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினராக 7 முறை பதவி வகித்துள்ள சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் என்பவரை துணை முதல் மந்திரியாக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களது கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த காங்கிரஸ் முஸ்லிம் தலைவரும், கர்நாடக சட்ட மேல்சபை உறுப்பினருமான ஒருவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பாரபட்சமின்றி அளித்த வாக்குகள்தான் காரணம். எனவே, சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் அல்லது முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவியை கட்சியின் தலைமை அளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களான நாங்கள் நிறைய தியாகங்களை செய்திருக்கிறோம். அதனால், எங்களை சேர்ந்தவர் முதல் மந்திரியாக வேண்டும் என்று இப்போது வலியுறுத்துகிறோம். எங்களது பங்களிப்பையும், ஆதரவையும் அங்கீகரிக்க தவறினால் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaDeputyCM
    ×