என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முற்றுகையிட்டு போராட்டம்"
- ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 100 பேர் நிரந்த பணியாளர்களாகவும் மீதம் உள்ள 200-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 4-ம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் நிரந்த பணியாளக்குக்கு மாத மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கபட்டு வருகிறது.
ஆனால் தற்காலிக தினக்கூலி பணியாளர் களுக்கு ஊதியம் வழங்கு வதில் வேண்டுமென்ற அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாகவும்,
இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி ஈரோடு மூலப்பாலையத்தில் உள்ள மாநகராட்சி 4-ம் மண்டல அலுவலகம் முன்பு இன்று தற்காலிக பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களா கவே ஊதிய வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதா கவும், இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக தாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- 100 நாள் வேலை வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
- இது குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நக்கலூத்து ஊராட்சி அக்ரஹார ப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு பணித்தள பொறு ப்பாளர்கள் சிலருக்கு வேலை இல்லை என்றும், உங்களுக்கு ஏற்கனவே உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கணக்குகளில் உங்கள் பெயர் இல்லை என்று கூறி வேலை வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு திரண்டு முற்று கைப் போராட்டம் நடத்தி னர். பின்னர் அலுவலகத்தி ற்குள் நுழைந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜய சந்திரிகா போரா ட்டம் நடத்திய கிராம மக்களை அழைத்து தற்போது பல்வேறு கணக்குகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் 100 நாள் வேலை சம்பந்தமாக எந்தவிதமான கணக்கும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏலகிரி ஏரி உள்ளது. இந்த ஏரியானது 1890 இல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சர்வே எண் 116 ல் 88 ஏக்கர் பரப்பளவை கொண்டிருந்தது.
கடந்த 2002-ம் ஆண்டு சர்வே எண் 94 ஆக மாற்றப்பட்டு ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர் குறைந்த நிலையில் ஏரி பகுதியிலும், ஏரியின் சுற்றுப்பகுதியிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2002-ல் தமிழக அரசால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை அதிகாரிகள் மூலம் வருவாய் துறையினருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏலகிரி கிராமத்திற்கு உட்பட்ட ஏரி பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்து வரும் 48 பேருக்கு வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட 18 குடும்பங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அனைவரும் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் 150 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் அருணா, அதிமுக ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜெயராமன், பாஜக ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஏலகிரி கிராம விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு தாங்கள் வசிக்கும் குடியிருப்பை அகற்றாமல் அதிகாரிகள் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் வருவாய்த் துறையும் பொதுப்பணி துறையும் ஏரியை முழுவதுமாக அளவீடு செய்யாமல் பாதி அளவிற்கு அளவீடு செய்து ஏரியின் உள்வாயில் உள்ள எங்களை அகற்ற துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
எனவே ஏரியை முழுவதுமாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து துறை அலுவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்று நடக்க இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம், ஏரியை முழுவதும் அளவீடு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதின் அடிப்படையில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஊராட்சி மன்ற தலைவர் ரகு, துணைத் தலைவர் ஜீவநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.
- கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
- ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் கே.என்.பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கே.என்.பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவ அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு அரசு மருத்துவ உயரதிகாரிகளிடம் இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்