search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை ஐகோர்ட்டு"

    • மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை காதலன் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
    • இச்சம்பவம் காமத்தால் நடக்கவில்லை என்பதால் காதலனுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்.

    மும்பை:

    மகாராஷ்டிராவின் நாக்பூரில் 26 வயதான வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்தார். 2020-ம் ஆண்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரை தேடிய போலீசார் சிறுமியை கண்டுபிடித்ததுடன், அழைத்துச் சென்ற காதலனையும் கைது செய்தனர். அவர்மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நான் வீட்டை விட்டு விரும்பியே வெளியேறினேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் வாக்குறுதி அளித்தார். இதனால் வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன். மகாராஷ்டிராவில் வெளியே பல்வேறு இடங்களில் தங்கியிருந்தோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தனக்கு ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் காதலன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமி மைனர் ஆனாலும், விருப்பப்பட்டே வீட்டை விட்டு காதலனுடன் தங்கியதாக போலீசிடம் கூறியுள்ளார். பாலியல் உறவு சம்பவம் அவர்களுக்கு இடையிலான காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. காமத்தால் நடந்ததாக தெரியவில்லை எனக்கூறி, காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    ×