search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் மயங்கி விழுந்து பலி"

    ஓமலூர் அருகே ஒட்டு போட்ட முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேட்டுப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 74). இவர் இன்று காலை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

    பின்னர் வெளியில் வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டனர்.

    ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ×