search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் தூக்குபோட்டு தற்கொலை"

    • வீட்டில் சுப்பிரமணியம் தூக்குபோட்டு கொண்டார்.
    • ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (73). விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சுப்பிரமணி யத்துக்கு பல ஆண்டுகளாக பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்து வருகிறது. மேலும் அவரது மகனும் கடந்த 10 வருடங்களாக சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருந்து வருகிறார். இதனால் சமீப காலமாக சுப்பிரமணியம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணியம் தூக்குபோட்டு கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் வரும் வழியிலேயே சுப்பிரமணியம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஸ்வநாதன் வீட்டினுள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அருகே மாமரத்து பாளையம் 1-வது தெரு லட்சுமி நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் விஸ்வநாதன் (வயது 79). இவரது மனைவி ஞானசுந்தரி.

    இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஸ்வநாதன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தவர் ஆவார். இதையடுத்து விஸ்வநாதன் அவரது உறவினர் மோகனாம்பாள் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

    விஸ்வநாதன் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த விஸ்வநாதன் வீட்டினுள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து மோகனாம்பாள் சித்தோடு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கு மாட்டிய நிலையில் அண்ணாதுரை தொங்கி தொங்கிக்கொண்டு இருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (62). இவரது மனைவி பெரிய நாயகி (57). இவர்களது மகன் சென்னை யில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் அருகிலேயே வசித்து வருகிறார்.

    பெரியநாயகி தனது மகனை பார்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை சென்றுவிட்டார்.வீட்டில் இருக்கும் அண்ணா துரைக்கு அருகில் வசிக்கும் அவரது மகள் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

    அண்ணாதுரை ஏலச்சீ ட்டு நடத்தி வந்ததாகவும், அவருக்கு சூதாடும் பழ க்கமும், மது அருந்தும் பழ க்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பண ப்பிரச்னையில் இருந்ததா கவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அண்ணாதுரைக்கு சாப்பாடு கொடுக்க அவரது மகள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் தனது கணவரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது தூக்கு மாட்டிய நிலையில் அண்ணாதுரை தொங்கி தொங்கிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அண்ணா துரை இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, அக். 3-

    ஈரோடு அடுத்த சித்தோடு மேட்டுப்பாளையம் மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (63). டிரைவர். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி யும், ஒரு மகனும் உள்ளனர்.

    கருப்பண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கருப்பண்ணன் மட்டும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கருப்பண்ணன் அவரது மகனிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டு உள்ளார்.

    ஆனால் அவரது மகன் இல்லையென்றதால் மனவே தனயைடைந்த கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×