search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் கொலை வழக்கு"

    • முதியவரை கொன்ற கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கடலுார்:

    கடலுார் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே டி. பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன், (வயது60.) இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கனகராஜ், என்பவருக்கும்வீட்டின் அருகே உள்ள மினிடேங்க் தண்ணீர் விவகாரத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.

    கடந்த 14.3.2020 அன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கனகராஜ் மற்றும் அவரது மனைவியான செல்வி, ஆகியோர் தாமரைச்செல்வன் மற்றும் அவரது மனைவி ஞானமணி மீது தாக்குதல் நடத்தினர்.

    இதில் காயமடைந்து மயங்கி விழுந்த தாமரைச்செல்வனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததை உறுதி செய்தனர்.இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடந்த2 ஆண்டுகளாக விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15,000 விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×