search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் சஸ்பெண்டு"

    • முறைகேட்டில் ஈடுபட்டதாக டீன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இருப்பவர் விஜயகுமார். இவர் இந்த மாதம் 30ந் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.

    திருவாரூரில் மருத்துவ கல்லூரி டீனாக பணிபுரிந்து வந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக விளக்கம் கேட்டு தற்போது அவருக்கு நோட்டீஸ் வழங்க–ப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருதுவக்கல்லூரி முதல்வர் விஜயகுமாரை சஸ்பெண்டு செய்து சென்னை மருத்துவத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டு–ள்ளது.

    அவருக்கு பதிலாக தற்போது சூப்பிரண்டாக உள்ள வீரமணி (பொறுப்பு) முதல்வராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்க–ப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×