search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்"

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. 

    இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

    மத்திய மந்திரி நிதின் கட்கரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என ஏற்கனவே கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக இமெயிலில் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #DelhiCMOffice #ArvindKejriwal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அலுவலகத்துக்கு கடந்த 9ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடத்தப்பட உள்ளதாக இமெயில் மிரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி முதல் மந்திரி மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    முதல் மந்திரி அலுவலகத்துக்கு வந்த இமெயில் மிரட்டலை அனுப்பியது யார் என்பது குறித்து டெல்லி சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக இமெயிலில் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #DelhiCMOffice #ArvindKejriwal
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்தார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவும் உடனிருந்தார்.
     


    இந்த சந்திப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறுகையில், சந்திரபாபு நாயுடுஜி மற்றும் ஷரத் யாதவ்ஜி ஆகியோருடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்  

    அரசியலமைப்பை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் திரள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
    ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க்க பாராளுமன்றத்தில் சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #RafaleDeal #Modi #ArvindKejriwal
    புதுடெல்லி:

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

    இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

    இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.  

    இந்நிலையில், ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் விவகாரத்தில் உண்மை நிலை குறித்து அறிய பிரதமர் மொடி பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #RafaleDeal #Modi #ArvindKejriwal
    டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். #ArvindKejriwal #DoorstepDeliveryServices
    புதுடெல்லி:

    டெல்லியில் வீடு தேடி சென்று சேவை அளிக்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ரேஷன், திருமணச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து சேவைகள் வழங்கப்படும் திட்டத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

    இந்த சேவைகளை பதிவு செய்ய கால் சென்டர் எண் 1076-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் பயணிகளின் இல்லத்திற்கே சென்று சேவை அளிக்கப்படுகிறது. இந்த சேவைகளுக்கு 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



    இந்நிலையில், டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார். #ArvindKejriwal #DoorstepDeliveryServices
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்லில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ParlimentElection
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, லோக்சபா பொதுத் தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளது.

    இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தனது தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

    மேலும், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவும் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஆம் ஆத்மி கட்சியும் இணையலாம் என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்லில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    அரியானா மாநிலம் ரோட்டக் சென்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில், டெல்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. மக்கள் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது.

    வரவுள்ள அரியானா சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ParlimentElection
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AnilBaijal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று சுப்ரீம்  கோர்ட் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.

    நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக தெரிவித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் டெல்லியில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

    இதற்கிடையே, புதுடெல்லியில் ஆட்சி சுமுகமாக நடைபெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்துப் பேச முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.  

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் 3 மணிக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AnilBaijal #ArvindKejriwal
    மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார். #AnilBaijal #CMArvindKejriwal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார்.

    இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர்.

    இந்நிலையில், மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதுதொடபாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனல் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கவர்னர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் பல மணி நேரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். அவருடன் மாநில மந்திரிகளும் உடனிருந்தனர். 

    இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், அரசின் திட்டங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல என தெரிவித்தார். #AnilBaijal #CMArvindKejriwal
    ×