search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் பினராயி விஜயன்"

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #MKStalin
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அந்த கட்சியின் எம்.பி.க்கள், தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

    உங்களுடைய இந்த உதவிக்கு கேரள மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #DMKMLAs #DMKMPs #KeralaFlood #KeralaCM #PinarayiVijayan
    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பினராயி விஜயன் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

    கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    கோப்புப்படம்

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi

    கல்வி, குடும்பச் செலவுக்காக சீருடையுடன் தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவியை சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் மாணவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனான். தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹனான் பி.எஸ்சி 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஹனான் குடும்பச் செலவுக்காக சுயமாக வேலை செய்து  கல்வி கட்டணத்தை செலுத்தி வந்தார். இதற்காக கைவினை பொருட்கள், மாலைகள் தயாரித்து தெருக்களில் விற்பனை செய்து பணம் ஈட்டினார்.

    சமீபத்தில் மாணவி ஹனான் தொடுபுழா தெருக்களில் கல்லூரி சீருடையுடன் மீன் விற்பனை செய்தார். ஏராளமானோர் அவரிடம் மீன் வாங்கி சென்றனர். மாணவி ஒருவர் கல்லூரி சீருடையில் தெருவில் நின்ற படி மீன் விற்பனை செய்தது பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது.

    இது சமூக ஊடகங்களில் பரவியதும், மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் மாணவி சுயமாக சம்பாதித்து குடும்பத்தையும், தனக்குரிய கல்வி கட்டணத்தையும் செலுத்துவதை பாராட்டி கருத்து பதிவிட்டனர்.

    ஹனானுக்கு ஊடகங்களில் பாராட்டு குவிந்த நிலையில் ஒரு தரப்பினர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஹனான் தெருவில் மீன் விற்பது போல் நடிக்கிறார் என தகவல் பரப்பினர்.

    இதற்கு கண்டனக்குரல்கள் எழுந்தன. சிலர் ஆதரிக்கவும் செய்தனர். ஆதரவாளர்கள் ஹனானை மேலும் மேலும் இழிவுப்படுத்தி செய்தி பரப்பினர்.

    தன்னைப்பற்றி அவதூறு பரவுவதை அறிந்து மாணவி ஹனான் மனம் வருந்தினார். உண்மையிலேயே தன் குடும்பம் ஏழ்மையானது என்றும், தனது தாயார் நோயால் அவதிப்பட்டு வருகிறார், அவருக்காகவே இது போன்று சிறு சிறு வேலைகள் செய்து பணம் ஈட்டி வருவதாக கூறினார்.

    ஹனான் கூறுவது உண்மை என்று அவரது கல்லூரி ஆசிரியர்களும், நிர்வாகமும் கருத்து தெரிவித்தது. சில சமூக ஆர்வலர்கள் ஹனானின் குடும்பப் பின்னணியை விசாரித்து ஹனான் கூறுவது உண்மை தான் என்றும், அவரை விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறினர்.


    மாணவி ஹனான் குறித்த தகவல் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கும் சென்றது. அவர், இது பற்றி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரிடம் விசாரித்தார். பின்னர் ஹனான் குறித்து தனது பேஸ்புக் தளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், மாணவி ஹனானின் தன்னம்பிக்கையை பாராட்டுவதாகவும், அவருக்கு கேரளாவும், கேரள மக்களும் துணை நிற்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    அதோடு ஹனானை தேவையின்றி விமர்சித்து அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், கூறி இருந்தார்.

    இதுபோல கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னந்தானமும் மாணவி ஹனானுக்கு பாராட்டு தெரிவித்தார். அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி இருந்தார்.

    மேலும் கேரள திரையுலக பிரபலங்களும், ஹனானுக்கு உதவ முன் வந்தனர். சிலர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினர். இதில், டைரக்டர் அருண்கோபியின் படத்தில் நடிக்க மாணவி ஹனானுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னந்தானம் மற்றும் சினிமா பிரபலங்களின் பாராட்டை தொடர்ந்து தொடுபுழா பகுதியில் ஹனான் பிரபலமாகி விட்டார். அவர், தெருவுக்கு வந்தால் மக்கள் திரண்டு சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களிடமிருந்து ஹனானை போலீசார் மீட்டு வரும் அளவிற்கு அவரது நிலைமை மாறி விட்டது. #Hanan
    ×