search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை கொள்முதல்"

    • தமிழ்நாடு மற்றும் கேரளா முட்டை விற்பனை சிறப்பாக உள்ளது.
    • ஐதராபாத் விலை குறைந்ததால் நாமக்கல் விலை குறைக்க வேண்டியது இல்லை.

    நாமக்கல்:

    முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு கூட்டம் நாமக்கல்லில் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    நாமக்கல் முட்டை விலை 440 பைசாவாக தொடர்வது என்றும், இனிவரும் நாட்களில் 440 பைசாவிற்கு கீழ் முட்டை விலை குறைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

    பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாமக்கல் முட்டை விலை ஐதராபாத் உள்ளிட்ட மண்டலங்களின் விலையை விட சராசரியாக 20 முதல் 30 பைசா வரை அதிகமாகவே இருக்கும். தமிழ்நாடு மற்றும் கேரளா முட்டை விற்பனை சிறப்பாக உள்ளது. எனவே ஐதராபாத் விலை குறைந்ததால் நாமக்கல் விலை குறைக்க வேண்டியது இல்லை.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாமக்கல்லில் 30 பைசா மைனஸ் என்பது மிகச் சிறப்பாக பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களிலும் இதே ஒத்துழைப்பு நீடிக்க என்.இ.சி.சி-யால் அறிவிக்கப்படும் மைனசிற்கு பண்ணையாளர்கள் விற்கவும், என்.இ.சி.சி-யால் அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மேல் வியாபாரிகள் கேட்காமலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஐதராபாத் விலை இறக்கத்தை பயன்படுத்தி நாமக்கல் மண்டலத்தில் முட்டை இருப்பு இல்லாத சூழ்நிலையிலும் சில வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் அதிக மைனசிற்கு கேட்பதாக தகவல்கள் வருகின்றன. இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளோடு இணைந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் எக் புரோடியூசர்ஸ் அசோசியேசன், ராசிபுரம் முட்டை கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து முட்டை எடுத்துச் சொல்லும் வியாபாரிகளின் வண்டிகளை ஆய்வு செய்ய உள்ளார்கள்.

    நாமக்கல்லில் முட்டை இருப்பே இல்லாத சூழ்நிலையிலும், அதிக மைனஸ் கேட்கும் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கிலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எடுக்கும் முடிவுகளுக்கு கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ஹைதராபாத் மற்றும் வட மாநிலங்களில் நுகர்வு சரிந்து, கொள்முதல் விலையை குறைத்துள்ளனர்.
    • தைப்பூசம் வர உள்ளதால், முட்டை நுகர்வோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் தினமும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி 550 காசாக இருந்த முட்டை விலை 9-ந் தேதி 565 காசாக உயர்ந்தது. இந்த விலை, முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. மேலும் இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது.

    கடந்த 21-ந் தேதி 20 காசுகள் சரிந்து 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 30 காசு குறைக்கப்பட்டு 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4 நாட்களில் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    நெக் நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 50 காசு குறைத்து விற்பனை செய்ய, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய குழு பரிந்துரை செய்கிறது.

    ஆனால் வியாபாரிகள் 85 காசுகள் குறைத்து 420 காசுக்கே கொள்முதல் செய்கின்றனர். மேலும் ஹைதராபாத் மற்றும் வட மாநிலங்களில் நுகர்வு சரிந்து, கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். அவற்றை கருத்தில் கொண்டு நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.

    தைப்பூசம் வர உள்ளதால், முட்டை நுகர்வோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது. தைப்பூசத்திற்கு மேல் முட்டை மார்க்கெட் சூடு பிடிக்கும். தற்போது உற்பத்தி செலவு மட்டுமே பண்ணையாளர்களுக்கு கிடைக்கிறது. எவ்வித லாபம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் விலையில் மீண்டும் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10 -க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வட மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×