search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகாம் தொடங்கியது"

    • தேர்தல் ஆணைய உத்தரவு படி 2024 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

    சேலம்:

    தேர்தல் ஆணைய உத்தரவு படி 2024 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    3257 ஓட்டு சாவடிகள்

    இதை தொடர்ந்து மாவட்டத்தில் 11 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள 1249 வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட 3,257 ஓட்டுச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்பட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வருகிற 2024 ஜனவரி மாதம் 1-ந் தேதி 18-ந் தேதி பூர்த்தியடைவோர் அதாவது 2005 டிசம்பர் 31-க்கு முன் பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற, மாற்று திறானாளியை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்தினர். நாளை( 5-ந் தேதியும்), தொடர்ந்து வருகிற 18, 19-ந் தேதி ஆகிய 2 நாட்களும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.

    ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பங்களை நிரப்பி வழங்கினர். தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்களை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அவருடன் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன், தாசில்தார் தாமோதரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் நடந்த வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ேமலும் இணையதளம் மூலமும், ஓட்டர் ஹெல்ப்லைன் எனும் செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . வாக்காளர்கள் பதிவை உறுதிப்படுத்த 1950 என்ற கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த விண்ணப்பங்கள் வருகிற 9-ந் தேதி வரை பெறப்பட்டு 2024 ஜனவரி 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிட தக்கது. 

    • மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.

    இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிரு ந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராள மானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

    இந்த மாதத்துடன் இலவ சமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறைவடைகிறது. எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்ப் படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×