search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிருகங்கள்"

    சர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. #Circus #CentralGovt
    புதுடெல்லி:

    சர்க்கஸ் என்றாலே மிருகங்களும், கோமாளிகளும், சாகசங்களும் நினைவுக்கு வரும். குழந்தைகள் ரசித்து மகிழ்வார்கள்.

    காட்டுக்கு சென்று பார்க்க முடியாத சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய மிருகங்களை கூண்டில் அடைத்து நம் கண்முன் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மிருகங்களை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்யக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மிருகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    ஆனால் நாய், யானை, குதிரை போன்ற மிருகங்களை வைத்தும் கிளிகளை வைத்தும் வேடிக்கை காட்டி வந்தனர். இப்போதும் அதற்கும் தடை வருகிறது. இது தொடர்பாக மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே அனைத்து வகையான மிருகங்களையும் சர்க்கசில் காட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதற்காக மத்திய அரசு புதிதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் மிருகங்களை காட்சி பொருளாகவோ, சித்ரவதை செய்து துன்புறுத்துவதை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

    .
    இதை சர்க்கசில் அமல்படுத்த வேண்டும் என்று வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து சர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே சிங்கம், புலி, கரடி தடை செய்யப்பட்டதாலும், டி.வி., செல்போன், இணைய தளம் வருகையாலும் சர்க்கசுக்கு மவுசு குறைந்தது. இப்போது எஞ்சியுள்ள மிருகங்களையும் தடை செய்தால் சர்க்கஸ் தொழில் அடியோடு பாதிக்கும் என்று சர்க்கஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்தியாவில் மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் தான் சர்க்கஸ் ஊழியர்கள் அதிகம் உள்ளனர். ஏற்கனவே சினிமா போன்ற தொழிலுக்கு அவர்கள் வாய்ப்பு தேடிச் சென்று விட்டனர். சர்க்கசும் முன்பு போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Circus #CentralGovt
    பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. #AnimalFat #jetfuel
    லண்டன்:

    விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாட்டின் கெட்டியான கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் இத்தகைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான எரிபொருள் தயாரித்துள்ளது.

    இதன்மூலம் எரிபொருள் தயாரிப்புக்கான செலவு குறைவாக உள்ளது. எனவே வருகிற 2035-ம் ஆண்டில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AnimalFat #jetfuel
    ×