search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மியான்மரில்"

    • மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எம்.அப்துல்லா எம்.பி. தெரிவித்தார்.
    • வெளியுறவுத்துறை மூலம் தொடர் முயற்சி

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கலந்துகொண்டு பள்ளி, மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் நூல்களை பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது மிகவும் மரியாதை உண்டு. ஏனென்றால் இன்று சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய அவர்களின் பிள்ளைகள் தான் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

    அவர்களது பெற்றோர்கள் கூட வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பது கிடையாது. பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது மட்டுமே தான். அதை நல்ல முறையில் கற்றுக் கொடுப்பது அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இன்று தலையாய கடமையாக செய்து வருகின்றனர்.அவ்வாறு மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதே சாதனை, தனியார் பள்ளியில் பாடம் கற்பது சாதனை அல்ல. அத்தகைய சாதனைக்குரியவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களே.

    தமிழகம் மூன்றில் ஒரு பங்கு வரிப்பணத்தை செலுத்தி வருகிறது தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருந்து வருகிறது. அதற்கு அடிப்படை காரணம் கல்வி கட்டமைப்பு தான். கல்வி உயர்வுதான் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணம். இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாக தமிழகம் இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது . இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர்கல்வி பயின்று வருவது தமிழகத்தில்தான் என்று பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற வளர்ச்சிப் பணிகள் இன்னும் ஆறு மாத காலங்களில் முழுமையாக முடித்து கொடுக்கப்படும்.

    அயல்நாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் என்ற ஒரு வாரியத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. இந்த வாரியம் மூலம் அங்கு வேலை பார்ப்பவர்கள் மற்றும் இங்குள்ள அவர்களுடைய குடும்பத்தினர் பாதுகாப்பு குறித்தும் அதை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

    தமிழர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் சிக்கிக்கொள்வது என்பது புது விஷயம் அல்ல, இது அடிக்கடி நடந்துள்ளது. அவர்களை மீட்டும் உள்ளோம். அதேபோன்று தற்போது மியான்மரில் உள்ள 19 நபர்களை மீட்க தூதரகத்திற்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழக முதல்வரும் வெளியுறவுத் துறை மூலம் சீறிய முயற்சி எடுத்து வருகிறார்.விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

    தமிழகத்திலிருந்து அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற தனித்துறையை இந்த அரசு அமைந்தவுடன் அதற்கு தனி அமைச்சரை நியமித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×