search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்"

    • தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்
    • தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், குதிரை க்கல்மேடு, கோனேரி ப்பட்டி பிரிவு, சாயபு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தாண்டவன் (47). குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையத்தில், மின்சா ர்த்துறையில் ஒயர்மே னாக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி சர ஸ்வதி (38). இவர், அப்பகு தியில் உள்ள தோட்டங்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருவாராம். இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரி யில் படித்து வருகின்றனர். தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல சரஸ்வதி தோட்ட வேலை க்கு சென்று விட்டாராம். சுமார் 10.30 மணியளவில் தாண்டவ னின் தாய் பழனியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த தாண்டவன் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.

    உடனடியாக பழனி யம்மாள் தனது மருமகள் சரஸ்வதி வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அதுகுறித்து கூறியுள்ளார்.

    இருவரும் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாண்டவனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே தாண்டவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×