search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி விபத்து"

    • மின் அதிகாரி விசாரணை
    • பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் நேற்று மேய்ச்சலுக்காக பசு மாடு ஒன்று சென்றது.

    அப்போது பாரி நகர் விரிவாக்க பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அறுந்து கிடந்த இருந்த ஒயரை மிதித்தது. மின்சாரம் தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து ராணிப்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • ஆடு மேய்க்க சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா கணவனை இழந்த இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவது மகன் சாலமோன் (வயது 39), திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில், சாலமோன் நேற்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க அவருடைய உறவினர் டேனியல் என்பவரின் மாந்தோப்பிற்கு சென்றார்.

    அப்போது அங்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் சுமார் 10 அடி தூரமுள்ள வயலில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    அவரது தாயார் சுசீலா அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சென்று தேடி பார்த்துள்ளார்.

    சந்தேகப்பட்டு ஆடு மேய்க்க சென்ற இடத்திற்கு சென்றார். அருகே உள்ள வயலில் தனது மகன் அசைவற்று கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாலமோனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போலீசார் விசாரணை
    • அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் தேவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் பொன் முடி (வயது 33), கட்டிட தொழிலாளி.

    இவர் வெறையூர் அருகே அண்டம்பள்ளம் கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பொன் முடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வெறையூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத ைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் இணைப்பை பழுது பார்த்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தேவராஜ் (வயது 35) டிராக்டர் டிரைவர். இவர் நேற்று மின்கம்பத்தில் ஏறி வீட்டிற்கு மின் இணைப்பை பழுது பார்த்தார்.

    அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இடது கை செயலிழந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்.

    ×