search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பெண் பலி"

    • திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
    • தண்ணீர் வீணாவதை பார்த்து பைப்பை நிறுத்த முயற்சி செய்தார்

    கோவை:

    கோவை ெபரியநாயக்கன்பாளையம் அடுத்த சாமி செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). டெய்லர். இவரது மனைவி ரோஷினி (33).இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரோஷினி தனது கணவரின் கடைக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் இருகே வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டில் இருந்து நீர் வெளியேறி கொண்டு இருந்தது. தண்ணீர் வீணாவதை பார்த்த ரோஷினி அங்கு சென்று தண்ணீர் தொட்டியில் இருந்து பைப்பை நிறுத்த முயற்சி செய்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் வயரை தொட்டார். இதில் திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் ரோஷினி மின்சாரம் பாய்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ரோஷினியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸபத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து ெபரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே அதியனூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி அஞ்சலை (வயது 53). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மாட்டுகொட்டகையில் பால் கறக்க சென்றார். அப்போது சமீபத்தில் பெய்த பலத்தமழையின் காரணமாக மின் கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின்வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத அஞ்சலை அங்கு சென்றபோது அவர் மீது மின்வயர் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அஞ்சலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அஞ்சலையின் மகன் ஆனந்தமுருகன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×