search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார தட்டுப்பாடு"

    • 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்ய நடவடிக்கை.
    • அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்று கொள்ள அமைச்சர் வலியுறுத்தல்.

    இஸ்லாமாபாத்:

    கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. தற்போது புதிதாக மின்சார உற்பத்தி பாதிப்பு பிரச்சினையும் தலைதூக்கி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தான் எரிசக்திதுறை அதிக நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அறிவித்தார். இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளதாவது:  


    புதிய திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள சந்தைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம். 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்தால், ரூ.62 பில்லியன் வரை சேமிக்க முடியும், ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகள் மற்றும் பல்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    பெட்ரோல் நுகர்வைக் குறைக்க பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிலாக மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக மின்சார பைக்குகள் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைக்க உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அன்றாட நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். விரயம் செய்யும் கலாச்சாரத்தை இனி எங்களால் தாங்க முடியாது, அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாடு தழுவிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாகாணங்களை அணுகும், வியாழக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாடு முழுவதும் இரவு 8.30 மணிக்கு அனைத்து மார்க்கெட்டுகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து மாகாண முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த தடை உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்லாமாபாத்தில் நடக்கும் திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தயாரிக்கப்படுகிறது.

    4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் மின்சாரம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    ×