search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வாரிய அலுவலகம்"

    • பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
    • 5 ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்க வில்லை. இதனால் மின்கட்டணம் செலுத்த அந்தப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொல்லிகாளிபாளையம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதனை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் மேற்கு பகுதிகளான காளிநாதம்பாளையம். அக்கணம்பாளையம், பொன்நகர், குப்புச்சிபாளையம், அல்லாளபுரம், பாரியூர்அம்மன் நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள சுமார் 2ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்இணைப்புகளை பிரித்து திருவள்ளுவர் நகர் பகுதியில் மின் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    மின்கட்டணம் செலுத்த 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதால் நொச்சிபாளையம் திருவள்ளூவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட மின் ஊழியர்கள் அனைவரும் பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்திலேயே பணிகளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது.
    • மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை திருப்பூர் சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது. இதன் பின்புறம் புதர் மண்டி காடு போல் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது .

    புதர் நிறைந்த இந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதர்பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×