search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிடூ"

    ‘மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார். #MeToo #RadhaRavi #ChinmayiSripada
    வைரமுத்து, அர்ஜூனை அடுத்து தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பத்திரிகையாளர்கள் காலை பிடித்து கேட்கிறேன். எது உண்மையோ அதை மட்டும் எழுதுங்கள். நாம் எல்லோரும் ஒண்ணு இல்லையா?. யாராவது புகார் கொடுத்தால் அதைப் பற்றி விசாரித்து பதிவு செய்யுங்கள்.

    சின்மயி நல்ல குழந்தைதான். ஆனால் அவங்களை யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது. எங்க டப்பிங் யூனியன்லகூட அந்தப் பொண்ணு உறுப்பினராக இருக்கு.

    சின்மயி இப்போது பாடுறதை விட்டுட்டு பேசுறதுக்கு ஆரம்பிச்சிருச்சு போல. இது இப்படியே வளர்ந்தால் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக மீ டூ இருக்கும். சம்மதம் இல்லாமல் எந்த குற்றமும் நடப்பது இல்லை. ‘மீ டூ’ வை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் ‘பிளாக்மெயில்’ செய்வார்கள்.



    இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அர்ஜூனும் நல்ல பையன்தான். அவர் மேல போய் இப்படி சொல்லியிருக்காங்க. நான் கெட்டவார்த்தை பேசுறேன்னு சொல்றாங்க.. ஒருபடம் முழுக்க கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க. நான் அதற்காக வெற்றிமாறனை பாராட்டுகிறேன். அந்த படமே வடசென்னை மக்களை பற்றிய படம். அந்த மக்கள் பேசுவதை அப்படியே தான் காட்ட முடியும்.

    எப்போது நடந்தது என்று கேட்டால் சின்மயிக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஸ்போர்ட் காணாமல் போனது என்பதை ஒரு காரணமாக சொல்கிறார். இன்று இருக்கும் டெக்னாலஜிக்கு ஒரு சில நிமிடங்களிலேயே நாம் எந்த நாட்டுக்கு எப்போது போனோம் என்பதை கூற முடியும்.

    சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது. இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு சங்கத்தில் பொறுப்புகளில் இருக்கும் விஷால் முன்வர வெண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சினிமா என்றாலே இப்படித் தான் என்று ஆகிவிடும். மீடூவை வைத்து பிளாக் மெயில் பண்ண தொடங்கிவிடுவார்கள். இப்போதே தொடங்கி விட்டார்கள். உடனடி நடவடிக்கை வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #MeToo #TimesUp #RadhaRavi #ChinmayiSripada

    தன் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்திய பெண் டைரக்டரிடம், ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் அலோக்நாத் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். #AlokNath #MeToo
    மும்பை :

    பிரபல இந்தி நடிகர் அலோக்நாத். இவர் பல பாலிவுட் படங்களில் தந்தை வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மீது இந்திப்பட பெண் டைரக்டரும், எழுத்தாளருமான வின்டா நந்தா சமீபத்தில் கற்பழிப்பு புகார் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் அலோக்நாத் மற்றும் அவரது மனைவி ஆசு ஆகியோர் மும்பையில் உள்ள அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பெண் டைரக்டர் வின்டா நந்தாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.

    மனுவில், எங்கள் புகாரை கருத்தில் எடுத்துக்கொண்டு அம்போலி போலீசார் வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும். அடிப்படை ஆதாரம் அற்ற இந்த புகாரின் காரணமாக வீட்டில் இருந்து வெளியில் தலை காட்ட முடியாமல் தவிக்கிறோம். இதற்கு காரணமான வின்டா நந்தா 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அலோக்நாத்தின் மனைவி ஆசு நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுபற்றி தைரியமாக வெளியில் சொல்ல முன்வரவேண்டும் என்று பாடகி சின்மயி மீண்டும் தெரிவித்துள்ளார். #MeToo #Timesup
    கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக இன்று பாடகி சின்மயி தனது முகநூல் நேரலையில் விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்தில் நடந்த வி‌ஷயத்தை நான் தாமதமாக சொன்னதற்கு காரணம் உண்டு. திருமணம் முடியும் வரை என்னை என் தாயார் பார்த்துகொண்டார். திருமணத்துக்கு பின் அவர் ஓய்வெடுத்து வருகிறார். இது அனைவருக்குமே தெரியும்.

    பொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் சிலரால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். நடிகைகளிடம் கேட்டால் நிறைய வெளிவரும். பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், கைதி போல நடத்துவார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்லாமல் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்.



    நான் தந்தையில்லாமல் வளர்ந்தவள். 10-ம் வகுப்புக்கு பின் கல்லூரிக்கு போகவில்லை. தபாலில் படித்து முடித்தேன். கன்னத்தில் முத்த மிட்டால் ரிலீசுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நான் பாட வேண்டிய நேரத்தில் என்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். அப்போது நான் ஒரு சிறிய பாடலை பாடினேன். பாடி முடித்ததும் என்னை தள்ளிவிட்டார்கள். கீழே விழுந்தேன்.

    இது எல்லோருக்கும் தெரியும். அப்போது வைரமுத்து என் தாயாருக்கு போன் பண்ணி நலம் விசாரித்தார். நான் அவர்மீது வைத்திருந்த மதிப்பு அதிகமானது.

    சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன்.

    எனக்கு ஜெர்மன் மொழி நன்றாக தெரியும். நாங்கள் சுரேஷ் வீட்டில் பாதுகாப்புக்காகவும் சுரேஷுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதற்காகவும் அவர் வீட்டில் தங்கினோம். சுரேஷ் தன் சொந்த மகளையே வைரமுத்துவை பார்க்க தனியாக அனுப்ப தயங்கியது நினைவிருக்கிறது.

    நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார்.

    அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை.



    இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும். இருந்தும் ஏன் மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    அப்போதே ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. இப்போதே நான் சொல்வதை நம்பாத இந்த தமிழ் சமூகம் அப்போது சொல்லியிருந்தாலும் ஒப்புக் கொள்ளவா போகிறது? அப்போது சில மீடியாக்கள் தான் இருந்தன. நான் கூறியிருந்தால் அது வெளியிலேயே வந்திருக்காது.

    இப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள். ஆதார் கார்டு முதல் பணமதிப்பிழப்பு விவகரம் வரை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.

    திருமணத்தில் வைரமுத்துவிடம் ஆசி வாங்கியதை கிண்டல் செய்கிறார்கள். திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க பட்டியல் போடும் போது சினிமா பிஆர்.ஓக்கள் முதல் பெயராக வைரமுத்து பெயரைத் தான் சொல்வார்கள். நான் வேண்டாம் என்று சொன்னால் அது தவறாகிவிடும். என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுபற்றி தைரியமாக வெளியில் சொல்ல முன்வரவேண்டும்.



    ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் ஐயா பேசும்போது தான் மற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு வைரமுத்துவுக்காக வந்ததாக கூறினார். இந்த அளவுக்கு அரசியல் பலமிக்க ஒருவரை எதிர்ப்பது என்பது முடியாத காரியம் தான்.

    எனது ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார்கள். நான் ஒழுக்கமானவள் தான். இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பயப்படாமல் தான் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளேன்.

    நான் தனி ஆள் இல்லை. என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சேர்த்தே குரல் கொடுக்கிறேன். ‘மீ டூ’ மூலம் கற்பழிப்பு புகார்கள் கூட வெளியில் வருகின்றன. அது வழக்காக மாறி இருக்கிறது.

    பெண்கள் சமூகத்தில் உடன் பழகும் பல ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படுத்த நாம் இடம் கொடுப்பதில்லை. ஆண்களுக்கு கூட சிறுவர்களாக இருந்தபோது தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு அதிகமாக நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார். #MeToo #Timesup #Chinmayi #MeTooIndia 

    பிரபலங்களுக்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கும் #MeToo இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #RahulonMeToo #MeToo
    புதுடெல்லி:

    பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்  #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் டுவிட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.

    அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த  #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், முன்னர் பிரபல பத்திரிகையாளராக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.


    இந்நிலையில், இந்த இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘பெண்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதை ஏற்காதவர்களுக்கான இடைவெளி குறுகி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    தேவையான மாற்றத்தை உருவாக்க உண்மைகள் தெளிவாகவும், உரக்கவும் உரைக்கப்பட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #RahulonMeToo #MeToo
    கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள சின்மயி, நடிகர்கள் கல்யாண் மற்றும் ஜான் விஜய் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். #MeToo #Timesup
    பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு மிடூ மூலம் அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள்.

    இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அனுப்பி உள்ளார்.

    அதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:-

    “நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.

    எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோல் கபாலி, சாமி-2, ராவணன், கோ உள்பட பல படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது ஒரு பெண் தெரிவித்துள்ள பாலியல் புகாரை பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு பண்ணை வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஜான் விஜய் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அவரை மற்ற பெண்கள் துணையுடன் விரட்டினேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

    விருந்தில் தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருள் தாராளமாக பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஜான் விஜய் மறுத்துள்ளார். இந்த புகார்கள் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. #MeToo #Timesup #Kalyan #JohnVijay

    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். #MeToo #Chinmayi #MeTooIndia
    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியாமேனன்.

    இவர் தனது டுவிட்டரில் “பாடலாசிரியர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார்” என்று தகவல் வெளியிட்டு இருந்தார். இதை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

    உடனே பெயர் குறிப்பிடாத பெண்ணின் தகவலை எப்படி நீங்கள் நம்பலாம் என்று சின்மயிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இது உண்மை தான். நம்புங்கள் என்று பதில் அளித்த சின்மயி இறுதியில் தானே வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என்று டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.

    சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பான “விழமாட்டோம்” என்ற நிகழ்ச்சியில் பாடுவதற்காக நான் சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்ட நிலையில் என்னையும், எனது தாயையும் மட்டும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் இருக்கச்சொன்னார்.

    எதற்கு என்று கேட்ட போது, வைரமுத்துவை ஓட்டலில் போய் பாருங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். நாங்கள் கோபத்துடன் மறுத்துவிட்டு உடனே இந்தியா திரும்பிவிட்டோம்.

    இவ்வாறு கூறியிருந்தார்.

    இது தொடர்பாக சின்மயி அளித்த பேட்டியில் கவிஞர் வைரமுத்து அவரது அலுவலகத்தில் 2 பெண்களை முத்தமிட முயற்சித்தார். என்னைப் போல பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் பேசுவார்கள்.

    வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். விளம்பரத்துக்காக இதை நான் சொல்லவில்லை, இதனால் எனக்கு இனிமேல் பாடவாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை என்றார்.

    மேலும் சின்மயி கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து எழுதிய கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் மறுத்துவிட்டேன். இதனால் என்னை அரசியல்வாதியைப் பற்றி தரக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன்” என மிரட்டியதாக கூறினார்.

    முதலில் இதற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்த கவிஞர் வைரமுத்து இப்போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடெங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையை காலம் சொல்லும்” என பதிவிட்டு இருக்கிறார்.

    வைரமுத்து பதில் அளித்த சில நிமிடங்களிலேயே, “அவர் ஒரு பொய்யர்” என சின்மயி தனது டுவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

    இந்த பிரச்சினையில் சின்மயிக்கு ஆதரவாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

    தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக நடிகைகள் ஆன்ட்ரியா, சமந்தா, வரலட்சுமி, இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

    ஆன்ட்ரியா கருத்து:- பாலியல் தொல்லை என்ற குற்றச்சாட்டை ஒழித்து பெண்கள் அனைவரும் நிம்மதியாக வாழும் நிலை ஏற்படவேண்டும்.

    குற்றம் செய்பவர்களுக்கு தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் ஏற்படவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்போ 50 ஆண்டுகளுக்கு முன்போ தவறு தவறு தான்.

    இசை அமைப்பாளர் ஜிப்ரான்:- சின்மயி நான் உங்களை மதிக்கிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். நன்றி.

    சமந்தா:- சின்மயியையும் அவரது கணவர் ராகுலையும் எனக்கு 10 வருடங்களாக தெரியும். அவர் கூறுவது உண்மை தான். சின்மயி உறுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    வரலட்சுமி:- முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பெண்கள் பேசுவது வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்.

    கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து இருப்பதை சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சுரேஷ் மறுத்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு படைப்பாளர் மீது குற்றம் சாட்டும் சின்மயி மீது உலகத்தமிழர்கள் கோபத்தில் உள்ளனர். சின்மயியும் அவரது தாயும் என்னுடைய இல்லத்தில் தான் தங்கினார்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். #MeToo #Chinmayi #MeTooIndia

    பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TanusreeDutta #NanaPatekar
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

    2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பாலியல் புகாரை நானா படேகர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தனுஸ்ரீ பொய் சொல்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நானா படேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.



    இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா ஒஹிவாரா போலீஸ் நிலையத்துக்கு சென்று நானா படேகருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். ஏற்கனவே கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

    தனுஸ்ரீ அளித்த புகாரை தொடர்ந்து நானாபடேகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் மனோஜ் குமார் சர்மா கூறும் போது, “நானா படேகர் உள்ளிட்டோர் மீது 354 மற்றும் 509 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் நாங்கள் வழக்குபதிவு செய்துள்ளோம்“ என்றார்.

    இதை தொடர்ந்து நானா படேகர் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவரை போலீசார் விரைவில் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TanusreeDutta #NanaPatekar

    ×