search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலத்தீவு முன்னாள் அதிபர்"

    பண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenarrest
    மாலே:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் . இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

    தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் அப்துல்லா யாமீன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தலைநகர் மாலேவில் அருகே யுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட ஜெயில் தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மாலத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenarrest  

    15 லட்சம் அமெரிக்க டாலர் அளவிலான ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அந்நாட்டின் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenarrest
    மாலே:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 
     
    மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார். 

    58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலிஹ் வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் பதவி ஏற்றார்.

    இதற்கிடையில், தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு சுமார் 15 லட்சம் டாலர்கள் அளவுக்கு முறைகேடாக நிதி திரட்டியதாக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    இவ்விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள சுமார் 65 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பணத்தை போலீசார் முடக்கினர்.

    இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபருக்கு எதிராக கடந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenarrest  
    முதல் வெளிநாட்டு பயணமாக இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். #MaldivesPresident #MohamedSolih #IndiaVisit #Modi
    புதுடெல்லி:

    மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த மாதம் 17-ந்தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியா வருமாறு நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.



    டெல்லி விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். மாலத்தீவு அதிபர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

    டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் இப்ராகீம் முகமது சோலி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.  #MaldivesPresident #MohamedSolih #Modi
    அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுக்காக பணம் திரட்டிய ஊழல் வழக்கில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் பணம் 65 லட்சம் டாலர்கள் முடக்கப்பட்டது. #Maldivesformerpresident #Yameen
    கொழும்பு:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 
     
    மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார். 

    58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலிஹ் வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் பதவி ஏற்றார்.

    இதற்கிடையில், தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு நிதி திரட்டியதாக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    இவ்விவகாரம் தொடர்பாக நேற்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள சுமார் 65 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Maldivesformerpresident #Yameen
    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபர் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். #MaldivesPresident #MohamedSolih #Modi
    புதுடெல்லி:

    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17-ம் தேதி இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு  முஹம்மது சோலிஹ்-க்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறை பயணமாக முஹம்மது சோலிஹ் நாளை டெல்லி வருகிறார்.

    வரும் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுடன் நட்பு வைத்துகொண்டே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார்.

    இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வரும் முஹம்மது சோலிஹ் ஆட்சிக் காலத்தில் இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MaldivesPresident #MohamedSolih #Modi
    பயங்கரவாத வழக்கில் தொடர்புப்படுத்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்தது. #Nasheed #maladives
    கொழும்பு:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.  கடந்த 2012-ம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம்  நஷீத், பறிகொடுத்தார். 

    அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். 

    சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் ஆபரேசன் நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. 

    அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரிகள் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து, ஆபரேஷனுக்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2016-ம்  ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார்.

    சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு திரும்பாமல் இலங்கை நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.

    மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23-ம் தேதி தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். புதிய அதிபராக இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற நிலையில் முகமது நஷீத் சமீபத்தில் தாய்நாடு திரும்பினார்.

    இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னர் மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் முஹம்மது நஷீத் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அவரது வக்கீல் ஹிஸான் ஹுஸைன்  ஆஜராகி வந்தார்.

    இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். #Nasheed #maladives
    மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது. #Maldiveselection #AbdullaYameen #AbdullaYameendefeat
    மாலி:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
     
    மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.

    58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த  பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    முஹம்மது சோலி

    இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

    வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த தில்லுமுல்லுவினால் முஹம்மது சோலி  58.4 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவித்த தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக யாமீன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். #Maldiveselection #AbdullaYameen  #AbdullaYameendefeat
    விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. #MaumoonAbdulGayoom
    மாலே:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து, மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

    அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 
    ×