search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி மாணவர்கள்"

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    • உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.
    • ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி குடிமங்கலம் வட்டார வளமையத்தின் சாா்பில் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.

    இதில் உதவி உபகரணங்கள் ஒருவருக்கும், புதிய தேசிய அடையாள அட்டை 30 பேருக்கும், இலவச பேருந்து பயண அட்டைகள், ெரயில் பயண அட்டைகள் 48 பேருக்கும் வழங்கப்பட்டன.

    மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் பாலசுந்தரி, வட்டார கல்வி அலுவலா் சரவணகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வசந்த் ராம்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுமதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி, ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். 

    • அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000-மும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3,000மும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.4,000மும், தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4,000மும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6,000மும், முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7,000மும் வழங்கப்படுகிறது.

    மேலும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3,000மும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.5,000மும், முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

    கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகள் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ}மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    மாணவ மாணவிகள் பிறதுறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதலமைச்சர் சான்றிதழ், மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×