search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான முதியவர்"

    • கீழ்பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வாய்க்காலில் இறந்து கிடந்தது காணாமல் போன பெருமாள் என்பது தெரிய வந்தது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளாள பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). சலவை தொழிலாளி.

    இவர் கடந்த 6 நாட்க ளுக்கு முன்பு மாயமானதாக அவரது மகன் ராம ச்சந்திரன் என்பவர் வர ப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கோபி அருகே உள்ள செம்மாண்டபாளையம் சின்னப்பாலம் என்ற இடத்தில் கீழ்பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாய்க்காலில் இறந்து கிடந்தது காணாமல் போன பெருமாள் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வர ப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வாழைத்தோட்டத்தில் பிணமாக முதியவர் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த ஏழூர் வேட்டுவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (82). இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு அம்மாசை குட்டி (54) என்ற மகன் உள்ளார். மகனுக்கு திருமணமான நிலையில் ராமசாமி கவுண்டர் வேட்டுவன் புதூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் ராமசாமி கவுண்டரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாசை குட்டி டி.என்.பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் விட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராமசாமி கவுண்டரை காணவில்லை. இதனையடுத்து அம்மாசை குட்டி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமசாமி கவுண்டரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட்க்கு பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்தில் இறந்த நிலையில் பிணமாக முதியவர் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடப்பது காணாமல் போன ராமசாமி கவுண்டர் என்பதை உறுதி செய்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதனையடுத்து ராமசாமி கவுண்டரின் உடலை மீட்ட போலீசார் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமசாமி கவுண்டர் அருகிலுள்ள அந்த வாழைத்தோட்டத்திற்கு எதற்கு வந்தார்? மயங்கி விழுந்து இறந்தார? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், நாயக்கர் வீதியை சேர்ந்தவர் சின்னகத்தி(56). இவரது மனைவி மீனாட்சி (50). இந்நிலையில் சின்ன கத்தி கடந்த 2 வருடமாக கால் வலியால் அவதி அடைந்து வந்துள்ளார்.

    இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    கால் வலி காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்து உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூறி வந்துள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி மீனாட்சி கணவரிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சின்னகத்தி மட்டும் இருந்தார்.

    மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்தபோது நீரில் மூழ்கி இறந்தது தனது கணவர் சின்ன கத்தி என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னகத்தி ஆற்றில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×