search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழம் விற்பனை"

    • மொத்த வியாபார கடைகளில் மாம்பழம் விற்பனை களை கட்டி உள்ளது.
    • சிறு வியாபாரிகள் வெளி மாவட்ட வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் அதிக அளவு விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடியில் விவசாயிகள் செந்தூரா, அல்போன்சா, பெங்களூரா, நீளம், பங்கன பள்ளி, உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது செந்தூரா, பங்கனபள்ளி, மல்கோவா சேலம் குண்டு, பெங்களூரா, உள்ளிட்ட மாம்பழங்கள் அறுவடை தொடங்கிய நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் மாம்பழங்களை கிருஷ்ணகிரி ,காவேரிப்பட்டினம், காரிமங்கலம், தருமபுரி உள்ளிட்ட மொத்த வியாபார கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மொத்த வியாபார கடைகளில் மாம்பழம் விற்பனை களை கட்டி உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறு வியாபாரிகள் வெளி மாவட்ட வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர்.

    விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் செந்தூரா கிலோ 60 ரூபாயும், மல்கோவா கிலோ 100 ரூபாயும், பீட்டர் 50 ரூபாயும், பங்கன பள்ளி 50 ரூபாயும் மற்ற ரகங்கள் கிலோ 50 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது நாங்கள் தோட்டங்களில் விளையும் அனைத்து ரக மாங்காய்களை பழுக்கும் தருணத்தில் பறித்து மொத்த விலை கடைகளுக்கு விற்பனை செய்கிறோம். தோட்டங்களை விவசாயிகளிடமிருந்து குத்தகை எடுத்துள்ள சில குத்தகைதாரர்கள் அவர்களே பறித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    ஆனால் சில வியாபாரிகள் உடனடி பணம் பார்க்க ஆசைப்பட்டு கெமிக்கல்களை பயன்படுத்தி உடனடியாக பழத்தை பழுக்க வைக்கின்றனர். அவ்வாறு பழுக்க வைத்த பழங்களை உண்ணும் போது உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    சில சமயங்களில் உயிரை கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனால் உணவு பாதுகாப்பு துறை விழிப்புடன் இருந்து அவ்வாறு பழுக்க வைக்கும் பழங்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×