search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதாந்திர கூட்டம்"

    • திருப்பத்தூர் ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று சேர்மன் பதிலளித்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார். உதவியாளர் மாணிக்கராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார்.

    கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பள தொகை போன்று ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வழங்க இந்த மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கவுன்சிலர் கருப்பையா பேசுகையில் ஆ.தெக்கூரில் இருந்து திருக்களம்பூர் செல்லும சாலை பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப் படாமல் இருந்து வருகிறது.

    இதனால் அவ்வழியே நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பள்ளி மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலை யில் இரு மாவட்ட எல்லையில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் தற்சமயம் புதிய தார் சாலை போடப்பட்டு விட்டது. எனவே சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உடனடியாக புதிய சாலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கவுன்சிலர் கலைமகள் ரா மசாமி கூறுகையில், செண்பகபேட்டை பகுதி யில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மாணவர் களுக்கென்று போதிய கழிவறை வசதி இல்லாமல் திறந்த வெளியிலும் காட்டுப்பகுதிக்கும் செல்ல வேண்டிய ஒரு அசாதார சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக புதிய கழிவறை கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து கவுன்சிலர் சகாதேவன் பேசுகையில் மேலையான் பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படாமல் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடியில் பயிலும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இடிக்கப்பட்ட பழைய கட்டிட இடத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட விரைந்து நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    கவுன்சிலர் களின் அனைத்து கோரி க்கை களுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று சேர்மன் பதிலளித்தார்.

    • நகர்மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும்.
    • திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் தீர்மானத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் எதிர்த்துள்ளோம்.

    பல்லடம்:

    பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி (6 வது வார்டு), பாலகிருஷ்ணன்(1 வார்டு),ராஜசேகரன்(2 வார்டு), சவுந்தர்ராஜன்(4 வார்டு), ருக்மணி சேகர்(16 வார்டு),விஜயலட்சுமி பழனிச்சாமி(15 வார்டு),பாமிதா கயாஸ்(9 வார்டு), சுகன்யா ஜெகதீஷ்(8 வார்டு), ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நகர்மன்ற மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டும் .ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பல்லடம் நகர்மன்ற கூட்டம் நடைபெறவில்லை.தொடர்ந்து 3 மாதங்களாகியும் நகர்மன்ற கூட்டம் நடைபெறாமல் உள்ளது. நகர்மன்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

    18 வார்டுகளிலும் நகர்மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும். பல்லடத்தில் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு மற்றும் தூய்மை பணிகள் மந்தமாக உள்ளது. குடிநீர் விநியோகம் மற்றும் பொது பிரச்சனைகளில் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் தீர்மானத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் எதிர்த்துள்ளோம். எனவே அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட தீர்மானத்தை, ஏன் தீர்மான நோட்டில் எழுதவில்லை. மேலும் அந்த தீர்மானம் எந்த காரணத்தினால் தோல்வியுற்றது என்று தீர்மான நோட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி உள்ளது.

    அதை கடைபிடிக்கவில்லை. திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீண்டும் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடலாமா, அல்லது ஏற்கனவே உள்ளவாறு நகராட்சி நிர்வாகமே பணியை மேற்கொள்ளுமா என்பது தெரியப்படுத்தவும். நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் பயன்படுத்தும் வாகனங்கள் அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும்.

    அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நிறுத்துவதால் உடல் ஊனமுற்றோருக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.நகராட்சி தலைவர் அலுவலகத்தில் இல்லாத போது தலைவரின் அறையை பூட்டி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் தலைமையில் நடந்தது. முன்னதாக மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்த குடிநீர், சாலை போன்ற உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    கவுன்சிலர்கள் மத்தியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிராம கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×