search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி ஜிடி 2 ப்ரோ"

    • குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
    • குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிப்பு.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

    5446 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெயின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிப்பு

    குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல், மிச்சாங் புயலால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

     

    • பிளஸ்-2 தேர்வில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
    • தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பிளஸ்-2 பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று நகரில் முதலிடத்தை பெற்றது. இந்த பள்ளி மாணவி தீபிகா முதலிடத்தையும், சபிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர். விலங்கியல் பாடத்தில் தீபிகா 100 மதிப்பெண்ணும், கணக்கியல் பாடத்தில் மாணவி கோபிகா 100 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் வரவேற்றார். முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசும், 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

    • மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
    • துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந தேதி துவங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் நலத்திட்ட பொருட்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்த கேள்விகள் எழுந்தன. பள்ளிக்கு வந்து தேர்வெழுத வராதவர்கள் நிலை குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்வெழுதாத மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம், கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் ஆப்சென்ட் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆப்சென்ட்டான மாணவர்களில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பட்டியல் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார்
    • சால்வை அணிவித்தார்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இங்கு படித்த கிஷேர் என்ற மாணவர் பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதல் இடமும், இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெணும் எடுத்தார்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பி.டி.ஏ. தலைவர் அசோக் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஹலோ... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கிறது? வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் இருக்கிறீர்களா? என்கிறார்கள்.
    • ஆலோசனை வழங்கும் போது கவுன்சிலர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் சமயோசிதமாக பேசி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.

    சென்னை:

    பிளஸ்-2 விற்கு பிறகு மருத்துவமா? என்ஜினீயரிங்கா? என்ன படிக்கலாம்? என்ற பலவிதமான கனவுகளுடன் இருந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சறுக்கினால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

    போச்சு... எல்லாம் போச்சு... என்று விரக்தியடைந்து உயிரையே மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்.

    அவர்களின் மனநிலையை மாற்றி இயல்பு நிலைக்கு திருப்பி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட சிறப்பு ஆலோசனை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைத்து உள்ளது. இதற்காக 104 என்ற தனி போன் எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மையம் டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்படுகிறது.

    40 மனநல ஆலோசகர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தேர்வு முடிவு வெளியானதில் 47 ஆயிரம் பேர் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார்கள்.

    இவர்களின் போன் எண்களை இந்த ஆலோசனை மையத்தில் சேகரித்து வைத்து உள்ளார்கள். தேர்வு முடிவு வெளியானதும் மிக குறைந்த மதிப்பெண்களில் வெற்றியை நழுவவிட்டவர்களின் போன் எண்களை தனியாக பிரித்து எடுத்தார்கள்.

    உடனடியாக அவர்கள் ஒவ்வொருவரையும் போனில் தொடர்பு கொண்டார்கள். மறுமுனையில் போனை எடுத்ததும் அவர்கள் குரலை வைத்தே ஆலோசகர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

    ஹலோ... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கிறது? வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் இருக்கிறீர்களா? என்கிறார்கள்.

    அதை கேட்டதும் மறுமுனையில் விம்மி அழுவதை புரிந்து கொள்கிறார்கள். என்ன தம்பி... எவ்வளவு தைரியமானவர் நீங்கள்... இப்படி அழலாமா... என்று உரையாடல் தொடங்கி மன அழுத்தத்தை குறைத்து அவர்களது எண்ணத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    இன்று வரை 2 ஆயிரம் பேரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். இந்த உரையாடலின் போதே 'ஹை ரிஸ்க்கில்' இருப்பவர்கள் தனியாக அடையாளம் கண்டு விடுகிறார்கள்.

    அவர்களை மட்டும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். இதுவரை 4 பேர் ஹை ரிஸ்க்கில் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

    ஆலோசனை வழங்கும் போது கவுன்சிலர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் சமயோசிதமாக பேசி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.

    பிளஸ்-2 வில் தோற்றதால் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக நினைக்கலாமா? இன்னும் துணைத் தேர்வு இருக்கிறது. அப்போது மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெற முடியும்.

    மதிப்பெண் குறைந்துவிட்டதே நான் விருப்பப்பட்ட பாடத்தை படிக்க முடியாதே என்று கவலைப்படுகிறீர்களா? அதற்கு இணையான எத்தனையோ  பாடங்கள் இருக்கிறது. உங்களால் இன்னும் எவ்வளவோ சாதிக்க முடியும் என்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.

    இதுதவிர நட்புடன் உங்களோடு மனநல சேவை என்ற இலவச தொலைபேசி (14416) எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு முற்றிலும் தற்கொலையை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

    ஆனால் இந்த எண்ணை மன அழுத்தத்தில் இருப்பவர் தொடர்பு கொண்டால் சில நிமிட காத்திருப்புக்கு பிறகு இந்திக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்துக்கு எண் 2-ஐ அழுத்தவும், தமிழுக்கு எண் 3-ஐ அழுத்தவும் என்று மொழியை தேர்வு செய்ய சொல்கிறது.

    அதன் பிறகு தமிழகத்தை சேர்ந்தவர்களா? புதுச்சேரியை சேர்ந்தவர்களா? என்பதை தேர்வு செய்கிறார்கள்.

    இத்தனை வேலையும் முடிந்த பிறகு அனைத்து இணைப்புகளும் பிசியாக உள்ளன. தயவு செய்து லைனில் காத்திருங்கள் என்று சில நிமிட ரெக்கார்டு பதிவை கேட்டு கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் இணைப்பு கிடைக்கும்.

    தற்கொலை முடிவு என்பது ஓரிரு நொடிகளில் எடுப்பது. அந்த நேரத்தில் அவர்களின் எண்ணத்தை மாற்றினால்தான் பலன் கிடைக்கும்.

    ஆனால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவர்கள் போன் பண்ணி கூடுதல் 'டென்ஷனை' வரவழைக்க விரும்பமாட்டார்கள். எனவே 14416 எண்ணின் செயல்பாட்டில் மாற்றம் தேவை.

    'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகினில்' என்பது உங்களுக்காக பாடப்பட்டது. பிளஸ்-2 என்பது ஒரு முயற்சி. அந்த முதல் முயற்சி உங்களுக்கு கைகொடுக்காமல் போயிருக்கலாம். போனால் போகட்டும்.

    இன்னும் முயற்சிக்கலாம். வேறு எவ்வளவோ படிக்கலாம். முன்னேறலாம். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. இந்த தோல்வி வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிக்கான திருப்புமுனை யாக கூட இருக்கலாம். கவலையை விடுங்கள். அடுத்த கட்டத்தை நோக்கி பயணியுங்கள்.

    • பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
    • கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 465 மாணவர்களும், 11 ஆயிரத்து 843 மாணவிகளும் தேர்வெழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் 10 ஆயிரத்து 135 மாணவர்களும், 11 ஆயிரத்து 693 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73 சதவீதம் ஆகும். மொத்த சதவீதம் 97.85 ஆகும்.

    மாநிலத்திலேயே மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மீண்டும் அதிகளில் தேர்ச்சி விகித்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    • பிளஸ்-2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 12-வது இடம்பெற்றது.
    • கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் பின்னடைவை சந்தித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 6790 பேரும், மாணவிகள் 7516 பேரும் என மொத்தம் 14306 பேர் தேர்வு எழுதினர்.இதில் 6413 மாணவர்கள், 7364 மாணவிகள் என மொத்தம் 13777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு 94.45 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விழுக்காடு 97.98 சதவீதம் ஆகும்.

    தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது 96.30 விழுக்காடு பெற்று மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 12-வது இடத்தை பெற்றுள்ளது.மொத்தம் 70 அரசு பள்ளிகளில் 18 அரசு பள்ளிகளும்,அரசு உதவி பெறும் 37 பள்ளிகளில் 8 பள்ளிகளும்,53 மெட்ரிக் பள்ளிகளில் 47 மெட்ரிக் பள்ளிகளும்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்ட அளவில் ஒப்பிடும்போது 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதவில்லை. இதுபற்றி அவர் பெற்றோரிடம் கூறிவந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அப்போது தேவா தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். அவர் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது.

    இதனால் மாணவர் தேவா மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி அடுத்த தேர்வில் பரீட்சை எழுதி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

    எனினும் தேர்வு தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த தேவா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.

    தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
    • தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பழனி கல்வி மாவட்ட த்தில் 87 பள்ளிகளை சேர்ந்த 3931 மாணவர்கள், 4437 மாணவிகள் என மொத்தம் 8369 பேர் தேர்வு எழுதுவத ற்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. மாவட்டம் முழுவதும் 215 பள்ளிகளை சேர்ந்த 22,914 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 9 இடங்களில் வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது.
    • 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நாளை 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிகிறது.

    பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியைமேற்கொள்ள உள்ளனர்.

    பிளஸ்-1 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள், 214 தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 106 தலைமை ஆசிரியர்கள், 106 துறை அலுவலர்கள், 1,780 அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட உள்ளது. இந்த முன்னேற்பாடுகள் அனைத்தையும் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம்.

    பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 முதன்மைத் தேர்வில், பலமுறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அன்று காலை நடைபெற்ற தமிழ் தகுதித்தாள் தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமாகி உள்ளது. பல மையங்களில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு ஏற்கனவே தாமதமாக ஆரம்பித்ததால், போட்டியாளர்கள், தங்கள் பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல், விடைத்தாளில் விடைகளைப் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் விடைத்தாள்களை வரிசை எண் படி மாற்றி வழங்கியிருக்கின்றனர். இந்த குளறுபடிகளிடையே, போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் ஏற்கனவே வினாக்களுக்கான பதில்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், அவற்றை திருத்த கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை எனவும், போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மீண்டும் தேர்வு தாமதமாகியிருக்கிறது. இதனால், மாலை நடந்த தேர்வும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. தேர்வாணையம் செய்த தவறுகளுக்கு, அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம், இத்தனை அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைவிட அதிர்ச்சியளிப்பது, தேர்தல் ஆணையத்தின் விளக்கம். 'முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகும். ஆகையால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது' என்றொரு விளக்கத்தைத் தேர்வாணையம் அளித்திருக்கிறது. பல லட்சம் மாணவர்களின் கனவான ஒரு முக்கியமான தேர்வுக்கு, தேர்வாணையம் தரும் மரியாதை இதுதான். 'கட்டாயத் தமிழ்த் தேர்வு' என்பது வெறும் ஒரு சடங்குதான். அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். திமுக அரசு தரப்பில் இருந்து, இதற்கு யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை. அரசுப் பணித் தேர்வுகளுக்காகத் தீவிரமாக படித்துப் பயிற்சி எடுத்த இளைஞர்களை, இதைவிட யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள், தங்களின் அத்தனை நாள் உழைப்பை வீணடித்துவிட்ட கோபத்தில் இருக்கிறார்கள். இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

    அது மட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள், 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று உறுதியளித்த திமுக அரசு, இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காக அயராது உழைத்து, தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒட்டு மொத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தி, அரசு இயந்திரத்தை முடக்கிய திமுக, உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்துவிட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக, அவர்கள் கோரிக்கையான, மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, இனியாவது, இது போன்ற முறைகேடுகளையும் குளறுபடிகளையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்".

    பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் சி.எஸ்.ஐ. வீதியை சேர்ந்தவர் தேவகிருைப.  பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி ஜோதி. இவர்களுக்கு ஜெயா (17) என்ற மகள் உள்ளார். ஜெயா பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

     சம்பவத்தன்று தேவகிருபை கடைக்கு சென்று விட்டார். ேஜாதி வெளியே சென்றார். வீட்டில் ஜெயா மட்டும் இருந்து வந்துள்ளார். பின்னர் ஜோதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டில் ஜெயா இல்லை. 

    அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேவகிருபை நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயாவை தேடிவருகின்றனர்.
    ×