search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்"

    • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
    • பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    ஈரோடு, 

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

    விருப்பம் உள்ளோர் வரும் 5-ந் தேதி முதல் 15-ந தேதி வரை, https://scert.tnschool.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ்-2 வில் மொழி பாடமாக படித்திருக்கவேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது. உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
    • தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    2022 ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக 24.06.2022 முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம்-1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

    ஜூலை –2022 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

    விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.07.2022 ஆகும்.

    மேலும், விபரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 04322-221584, 9486311243, அரசு தொழிற் பயிற்சி நிலையம், விராலிமலை 9865447581, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை, 9443184841 ஆகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
    • விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவர் விடுதிகள்-5, பள்ளி மாணவியர் விடுதிகள் -4, கல்லூரி மாணவர் விடுதி -1, கல்லூரி மாணவியர் விடுதிகள் -3 ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 -ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவர்/மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர்/மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்/மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

    தகுதியுடைய மாணவ /மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

    கல்லூரி விடுதி களைப் பொருத்தவரை 31.7.22-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே மாணவ -மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×