search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் போராட்டம்"

    • மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
    • மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் அடுத்த தண்டலம் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அம்பத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் படித்து வருகிறார்.

    இன்று காலை 8.30 மணி அளவில் அந்த மாணவர் சீருடை மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை அணிந்த படி திருவள்ளூருக்கு வந்தார். திடீரென அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் விசாரித்த போது அந்த மாணவர் தனது கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி இருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் காரில் ஏற்றி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் இந்த திடீர் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
    • கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி நின்றார்.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் அடுத்த தண்டலம் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அம்பத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் படித்து வருகிறார்.

    இன்று காலை 8.30 மணி அளவில் அந்த மாணவர் சீருடை மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை அணிந்த படி திருவள்ளூருக்கு வந்தார். திடீரென அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் விசாரித்த போது அந்த மாணவர் தனது கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி நின்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் காரில் ஏற்றி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் இந்த திடீர் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


    • போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
    • போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் விரட்டினர். மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனவே தாக்குதலை நிறுத்தும்படி போலீஸ் அதிகாரிகளிடம் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்களும் சில மாணவர்களும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியது.

    போலீசாரின் தாக்குதலுக்கு மாணவர் அமைப்பு மற்றும் பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×