search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுத்தாவணி பஸ் நிலையம்"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டியும், நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வருவதை முன்னிட்டும், மேலும் ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தை யொட்டியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

    அந்தவகையில், மதுரையில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், தெற்கேயும் இரு பிரிவுகளாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தல்லாகுளம் பெருமாள் கோவில், கோரிப்பாளையம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    அதேபோல் பெரியார் பேருந்து நிலையம், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆறு பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீவிர சோதனை இன்று முதல் ஜனவரி 26-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நகை இருந்த கைப்பையை திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 28). இவர் மனைவியுடன் மதுரை வந்திருந்தார். மீண்டும் கும்பகோணம் செல்வதற்காக இருவரும் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    பஸ்சின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் இடத்தில் கைப்பையை வைத்துவிட்டு பஸ்சுக்காக கீழே இறங்கி காத்திருந்தனர். கைப்பையில் 7 பவுன் நகை இருந்தது.

    அப்போது பஸ்சில் ஏறிய மர்ம நபர் கைப்பையை நைசாக திருடிக் கொண்டு தப்பினான். இது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சில தினங்களுக்கு முன்பு இதே பாணியில் பஸ் பயணியிடம் நகை-பணம் இருந்த கைப்பை திருடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விழிப்புணர்வோடு இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×