search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுபிடி வீரர்கள்"

    • சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் வரும் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரு–கிறது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் முன்பதிவு பணி தொடங்கியது. இதனை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, பொருளாளர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முன்பதிவில் மொத்தம் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனிடையே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அளித்த மனுவில், 'அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என்று ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவையும் இணைத்துள்ளேன். அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

    • ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மாடுபிடி வீரர்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இந்தப் பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதாகவும் மாடுபிடிவீரர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மதுரையை சுற்றிய பல பகுதிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மதுரை முடக்கத்தான் பகுதியிலும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். தாங்கள் வளர்த்து வரும் காளைகளை ஓடி வரச் செய்து அவற்றை வேகமாக தாவிப்பிடிப்பதற்காக பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    மேலும் சுற்று மாடுகள் போல் மாடுகளை சுற்றிவரச் செய்தும் பயிற்சி பெறுகின்றனர். இந்தப் பயிற்சிகள் தாங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பதற்கான நம்பிக்கையை அளிப்பதாகவும், மேலும் மாடுகள் எப்படி ஓடிவரும், அவற்றை எப்படி தாவி பிடிப்பது என இந்தப் பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதாகவும் மாடுபிடிவீரர்கள் தெரிவித்தனர். 

    • அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • கலெக்டர் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழி காட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணைய தளத்தில், தங்களது பெயர்களை பதிவு செய்து, பாஸ்போர்ட் புகைப்படம், 2 தவணை கொரோனா செலுத்தியதற்கான சான்று, வயது சான்று ஆகியவற் றை பதிவேற்றம் செய்ய வேண் டும். இதேபோல ஜல்லிக்கட் டில் பங்கேற்கும் மாடுகள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க் கப்பட்ட பிறகு, தகுதி யான நபர்களுக்கு இைணய தளத்தில் டோக்கன் பதிவேற்றப்படும். இந்த டோக்கனை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஒரு காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் காளையுடன் அனுமதிக்கப்படுபவர்கள், மாடுபிடிவீரர்கள், பார்வை யாளர்கள் போட்டி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றை கொண்டு வர வேண்டும்.

    ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு விளை யாட்டுகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர் களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே பார்வையா ளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

    திறந்தவெளி அரங்கின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியுடன் 150 பார்வை யாளர்கள் அல்லது அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் 50 சதவீதத்திற்கும் மிகாத எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
    • சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேல பட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சி பட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்க ளுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×