search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை குறைவு"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 41.99 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவ லர் (பொ) கவிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டுக்கு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். கடந்த 25-ந் தேதி வரை 674.55 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 41.99 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.

    2023-ம் ஆண்டில் மார்ச் மாதம் வரை நெல் 10,427 எக்டர், சிறுதானியங்கள் 80,266 எக்டர், பயறு வகைகள் 11,258 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 33,320 எக்டர், பருத்தி 4,415 எக்டர் மற்றும் கரும்பு 10,585 எக்டர் என மொத்தம் 1,50,271 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 640 எக்டர், கத்திரி 600 எக்டர், வெண்டை 421 எக்டர், மிளகாய் 370 எக்டர், மரவள்ளி 17,514 எக்டர், வெங்காயம் 4,654 எக்டர், மஞ்சள் 1,729 எக்டர் மற்றும் வாழை 2,641 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், தோட்டக்க லைத் துணை இயக்குநர் கணேசன், வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×