search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்கள் மறுப்பு"

    கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #KolkataInfantsBodies
    கொல்கத்தா:
     
    தெற்கு கொல்கத்தா நகரின் ஹரிதேப்பூர் பகுதியில் ஒரு ரியல் எஸ்ட்ட நிறுவனம் அண்மையில் வாங்கிய காலி மனை பகுதியில் தூய்மை பணி நடந்தது.

    அப்போது அங்கிருந்த புல்வெளிக்குள் ஆங்காங்கே 14 பிளாஸ்டிக் பைகள் சிதறிக் கிடந்தன. அவற்றை பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. அந்த பைகளுக்குள் 14 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று குழந்தைகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தா புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது. மனித உடல்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அவை வெறும் மருத்துவ கழிவுகள் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். #KolkataInfantsBodies
    ×