search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம் 6 பேர் கைது"

    • ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தர வின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருக்கம் பாளை யம் வாய்க்கால் கரை பகுதி அருகே ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேக ப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சீட்டுக்கு அடியில் 34 மது பாட்டில்கள் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஈரோடு 46 புதூர், சின்ன கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (59) என தெரிய வந்தது.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடமி ருந்து 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்த மல்லன்குழி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் 12 பாக்கெட் மதுவை போலீசார் கைப்பற்றினர். விசாரணை யில் அவர் தாளவாடி அடுத்த மாரியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகி ரியாஸ் (67) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் அம்மா பேட்டை சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டை அடுத்த மூலுயனூர் ராம்ராஜ் தோட்டம் அருகே ஒருவர் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்ததில் 59 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் அனுமதி இன்றி மது விற்பனை யில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேப்போல் கடத்தூர் ஈரோடு டவுன் போன்ற பகுதிகளிலும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 124 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • பெரும்பாறையில் சாலையோரத்தில் பெட்டி கடை வைத்து அப்பகுதி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • இலவ மரங்களை வெட்டியதால் சாலை யோரங்களில் உள்ள தகர கடைகளின் மேற்கூரை மீது விழுந்து சேதமடைந்தன.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் ராணி, சுரேஷ், ஒச்சம்மாள், அரசுமாயன், வெங்க–டாசலம், பட்டறராணி ஆகிய 6 பேரும் சாலையோரத்தில் பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    அந்த பகுதியில் பேயத்தேவர் மனைவி ராணி என்பவர் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்.

    இந்த தோட்டத்தில் இலவ மரங்களை வெட்டி சாலை யோரங்களில் உள்ள தகர கடைகளின் மேற்கூரை மீது சாய்த்துள்ளனர்.

    இதனால் கடைகள் அனைத்தும் நொறுங்கி பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து தாண்டிக்குடி போலீசில் தோட்ட உரிமையாளர் ராணி மீது சுரேஷ் புகார் கொடுத்துள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜங்சன் மேம்பாலப் பணி 6 மாதத்தில் முடிவடையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
    • அண்ணாமலை கனவு காண யாரும் தடை போட முடியாது

    திருச்சி :

    திருச்சி மாநகரம் முதலியார் சத்திரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டியை திருச்சி மக்களவைத் தொகுததி உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.

    அப்போது செய்தியாள ர்களிடம் கூறியது: தடைபட்டுள்ள திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிவடையும். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிலும் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுளளார். அவர் கனவு காண யாரும் தடை போட முடியாது. ஆனால் அது யதார்த்தத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

    ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. மக்களைப் பிளவுப்படுத்தும் விதத்தில் ஆதீனகர்த்தர்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக்கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி, மதம் இவற்றால் மக்களை பிளவுப்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது.

    வரம்பு மீறாமல் நாகரிகம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தில் பேச வேண்டும் என்றார். 

    • வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    கரூர்:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). இவர் மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து உள்ளது.

    இந்தநிலையில் சக்திவேல் மனைவி கோவிந்தம்மாள், அவருடைய உறவினர்களான சேலத்தை சேர்ந்த திவ்யா, தங்கமணி, பெரியசாமி, ஏழுமலை, செந்தில் ஆகிய 6 பேர் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரை தகாதவார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பாலசுப்பிரமணியன் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ஆலங்குளத்தில் காரை உடைத்து ரகளை செய்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    விராலிமலை தாலுகா, ஆலங்குளத்தில் உள்ள கடைவீதியில் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் பல நாட்களாக மாலை நேரத்தில் மதுபோதையில் கடைகளில் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்து வருவதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பிச்சை மனைவி சரஸ்வதி (வயது 50) என்பவர் தனது மகனுடன் நேற்று முன்தினம் விராலிமலை சென்றுவிட்டு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கடை வீதியில் மதுபோதையில் நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூரியூர் முருகேசன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா சொக்கம்பட்டி அழகு மகன் மணிகண்டன் (23), சூரியூர் பழனிசாமி மகன் உதயகுமார் (21), எழுவம்பட்டி முருகேசன் மகன் தமிழரசன் (21), செம்புலிங்கம் மகன் கோபிநாத் (20), அருவங்கால்பட்டி கருப்பையா மகன் லெட்சுமணன் (21) ஆகிய 6 பேரும் சரஸ்வதி, சுரேஷ்குமார் ஆகியோர் வந்த காரை வழிமறித்து கதவை உடைத்து அவர்களை வெளியே வருமாறு தகாத வார்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி ஆகியோர் நேற்று காலை ஆலங்குளம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் கடைவீதியில் நின்றுகொண்டு ரகளையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல் காவிரி ஆறு வழியாக செல்கிறது.

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான சரவணன், அவரது மனைவி ஜோதி மணி மற்றும் அவரது மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தரகேஷ் உள்பட 6 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது மணல் அள்ளிய பள்ளத்தில் எதிர் பாராதவிதமாக அவர்கள் சிக்கி கூச்சல் இட்டனர். இதை பார்த்த அந்த பகுதியினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியாததால் 6 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த பரமத்திவேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சரவணன், ஜோதிமணி, மற்றொரு பெண்ணின் உடலையும் மீட்டனர். மேலும் 3 பேரின் உடல்களை தேடி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட்6 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #LenovoZ6Pro



    லெனோவோ நிறுவனம் தனது இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. பீஜிங் நகரில் நடைபெறும் விழாவில் லெனோவோ தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

    அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படத்தையும் லெனோவோ வெளியிட்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ மற்று்ம மேக்ரோ ஷூட்டிங் வசதி வழங்கப்படுகிறது. 



    முன்னதாக லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாங் செங் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருக்கும் புகைப்படங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்ததுது.

    இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #LenovoZ6Pro



    லெனோவோ நிறுவனம் தனது இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாங் செங் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். 

    டீசர் புகைப்படங்களின் படி புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



    எனினும், இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
    ரெட்மியின் நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. #RedmiNote6Pro



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அனைவரும் வாங்கக்கூடிய விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய சந்தையில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

    இந்நிலையில், ரெட்மி நோட் 6 ப்ரோ வாங்குவோருக்கு பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரியும், மற்றொரு வேரியண்ட் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    தற்சமயம் சியோமி அறிவித்திருக்கும் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கிடைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சியோமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

    இதனால் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் தற்சமயம் ரூ.11,999 மற்றும் உயர்-ரக வேரியண்ட் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ப்ளிப்கார்ட் சார்பில் எளிய மாத தவணை முறை வசதியும், ரூ.11,950 வரை எக்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
    சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami #Farmers
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. 

    இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் பயனடையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலைவாணர் அரங்கத்தில் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.2000-க்கான உதவித்தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்றார். #EdappadiPalaniswami #Farmers
    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. #Xiaomi #Redmi6



    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்காலிக விலை குறைப்பு இன்று (பிப்ரவரி 6) துவங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 முதல் ரூ.2000 வரை குறைக்கப்படுகிறது.

    சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பிற்கான அறிவிப்பினை ரெட்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து ரெட்மி இந்தியா தனது ஸ்மார்ட்போன்களுக்கு தற்காலிக விலை குறைப்பினை அறிவித்துள்ளன. சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு எவ்வித சலுகைகளையும் அறிவிக்கவில்லை.  



    ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்Hனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலையும் ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் ரூ.500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இறுதியில் ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 மதிப்புடைய உடனடி தள்ளுபடி மற்றும் 20 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
    இலங்கையில் மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #SriLankaFiring

    கொழும்பு:

    இலங்கையின் தென் பகுதியில் தங்காலை குட வெல்ல என்ற துறைமுக நகரம் உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் அங்கு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அதில் 4 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்தியது டி56 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் என போலீசார் தெரிவித்தனர். #SriLankaFiring

    ×