search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம் கடத்தல்"

    • வருவாய் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது உறுதியானது.
    • வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் மர பாதுகாப்பு சட்டம் அனைத்தையும் மீறி உள்ளார் என்றார்.

    பெங்களூர்:

    கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதாப் சிம்ஹா. பா.ஜனதா எம்.பி.யான இவரது சகோதரர் விக்ரம் சிம்ஹா. இவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வனநிலத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் இருந்த 50 முதல் 60 ஆண்டுகள் பழமையான பலகோடி ரூபாய் மதிப்புள்ள 126 மரங்களை வெட்டி கடத்தி விற்றதாக தகவல் தெரியவந்தது.

    இதையடுத்து வருவாய் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது உறுதியானது. இதுபற்றி தெரியவந்ததும் அவர்கள் பெங்களூர் நகர் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் விக்ரம் சிம்ஹா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் அனுமதி பெறாமல் நந்தகொண்டனஹள்ளி கிராமத்தில் மரங்களை வெட்டி கடத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.

    இதுகுறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறும்போது, விக்ரம் சிம்ஹா ஹாசன் மாவட்டத்தில் 126 மரங்களை சட்டவிரோதமாக வெட்டி விற்றதாக கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் மர பாதுகாப்பு சட்டம் அனைத்தையும் மீறி உள்ளார் என்றார்.

    மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் கைதான விக்ரம் சிம்ஹாவின் சகோதரர் பிரதாப் சிம்ஹா கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேருக்க பார்வையாளர் அனுமதி சீட்டுகளை வழங்கிய புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான மரத்தை வெட்டினார்
    • வனத்துறையினர் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், கல்லுட்டை 13-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த தேவி என்ற பெண் கவுன்சிலர் உள்ளார்.

    இவரது கணவர் சிவகுமார்(50). இவர் அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

    இந்நிலையில், பெண் கவுன்சிலர் தேவியின் கணவன் சிவகுமார் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 டன் எடை கொண்ட தைல மரத்தை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்றார்.

    இதுகுறித்து, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தை கைப்பற்றினர்.

    இதற்கிடையே, சிவகுமார் வனத்துறையினர் வருவதையறிந்ததும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்து றையினர் தலைமறைவாக உள்ள சிவகுமாரை தேடி வருகின்றனர்.

    ×