search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடும் பணி"

    • பருவமழைக்கு முன்பாகவே 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
    • தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொழில்மையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடுதல் பணி துவக்கி வைக்கப்பட்டது.

    தருமபுரி,

    மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்" என்ற முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லிற்கிணங்க, அவரது பிறந்த நாளான நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நாளான முதல்-அமைச்சர், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தருமபுரி தொழில்மையம் அருகில் நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தின் சார்பில் 12,000 மரக்கன்றுகள் நடவு செய்திட முடிவெடுக்கப்பட்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொழில்மையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடுதல் பணி துவக்கி வைக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் தருமபுரி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் நாகராஜி, தருமபுரி உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர் கிருபாகரன், திறன்மிகு உதவியாளர்கள், நல்லம்பள்ளி வட்டாசியர் ஆருமுகம், சாலைப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் வேலூர் காகிதப்பட்டறையில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

    இந்நிகழ்ச்சுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்டை பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இளநிலை பொறியாளர் விஜயா முன்னிலை வகித்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில் மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார், 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நடந்தது

    திருவண்ணாமலை:

    பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

    தமிழக முதல்- அமைச்சரால் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2 லட்சத்து 38 ஆயிரம் மரக்கன்றுகளும், வேளாண் துறை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகளும் என ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடைபெற்றது.

    இந்த பணி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் 345 கிராமங்களிலும் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதன் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை ஒன்றியம் தென்மாத்தூர் கிராம ஊராட்சியில் குளத்தின் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

    துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு வகையில் தமிழகத்தில் முன்னிலையில் திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    நிலத்தடி நீர் மேம்பாடு, பண்ணை குட்டை அமைத்தல் ஆகியவற்றில் முதல் மாவட்டமாக திகழ்ந்ததால் கலெக்டருக்கு முதல்- அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாக பல்வேறு முயற்சி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த பணியும் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×