search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்கிய பெண்"

    • வளர்மதி வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றார்.
    • நீதிபதி சபீனா பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அவினாசி :

    அவினாசியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவருடைய மனைவி வளர்மதி (36) ஆகியோர் வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றனர். அப்போது அறைக்குள் சென்ற வளர்மதி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த நீதிபதி சபீனா உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அப்பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மயங்கி விழுந்த பெண் விசாரணைக்கு வந்தவர் என்று தெரிந்தும் உடனடியாக நீதிபதி சபீனா மனிதநேயத்துடன் உதவிய மனிதாபிமான செயலை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

    ×