search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை"

    • வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார்.
    • சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர், 4 -வது வீதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன் (62). பெயிண்டர். தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதர்மொய்தீன் பிரேத பரிசோதனை முடிவு வெளி வந்தது.

    அதில் விலா எலும்பு உடைந்து நுரையீரலில் குத்தியதில் காதர் மொய்தீன் இறந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கருங்கல் பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த லோகு (34) என்ற கட்டிட தொழிலாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மொய்தீனை கொன் றதை ஒப்புக் கொண்டார்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:

    காதர் மொய்தீன், லோகு பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி மதுவும் அருந்தி வந்துள்ளனர்.

    காதர் மொய்தீன் அடிக்கடி நாகூர் சென்று பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வீட்டு வேலை செய்ய ஒரு பெண் தேவை என்று கேட்டுள்ளார். இதையடுத்து லோகுவின் மனைவியை அங்கு வேலைக்கு சேர்த்து உள்ளார்.

    இந்நிலையில் மனைவி மாயமானதாக நினைத்து லோகு ஆத்திரத்தில் இருந்து உள்ளார். நாகூரில் அவர் வேலை செய்வதும் அதற்கு காதர் மொய்தீன் தான் காரணம் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த 7-ந் தேதி இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லோகு, காதர் மொய்தீனை கைகளால் தாக்கியும், நெஞ்சு விலா எலும்பு பகுதியில் கால்களால் ஏறியும் மிதித்துள்ளார்.

    இதில் மொய்தீன் மூச்சுத் திணறி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதனை அடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

    • ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்திரிகோலால் பிரியாவை குத்தினார்.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியவலசு கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). மரக்கட்டில், மேஜைகளுக்கு பாலீஸ் போடும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (22). தறிபட்டறை தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரியா பிரிந்து வந்து குழந்தைகளுடன் வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று செந்தில்குமார், பிரியா வசித்து வரும் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால் செந்தில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்திரிகோலால் பிரியாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் குத்தினார். பிரியா வலியால் கூச்சல்போட அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த பிரியாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ராமு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செல்வியின் தலை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள 60 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு (40). இவர் ஈரோடு மாநக ராட்சி 3-வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி செல்வி (34). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் செல்வி க்கும் மற்றொரு வாலிப ருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமு அவரது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உற வினர்கள் கணவன்- மனைவிக்கு இடையே சமா தானம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் செல்வி க்கும் மற்றொருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால் ராமு மனைவியை கண்டித்தார். இதை தொட ர்ந்து அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் 60 வேலம் பாளையம் சென்று பொருட்களை வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த ராமு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செல்வியின் தலை, கழுத்து, முதுகு, கை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    இதையடுத்து ராமு அங்கு இருந்து சென்று தலைமறைவாகி விட்டார். இதில் செல்வி படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×