search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியுடன் கருத்து வேறுபாடு"

    மனைவி பிரிந்து வாழ்வதால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வந்தவாசி:

    வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த தனலட்சுமி (30)என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.

    சொரூபன் (4) என்ற ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    தனலட்சுமி தாய்வீடான அரக்கோணத்தில் இருந்து வருவதால் பலமுறை சுதாகர் அழைத்தும் தனலட்சுமி வந்தவாசிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சுதாகர் நேற்று ஆரணி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவ்வழியாக சென்றவர்கள் பிணத்தை பார்த்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே வங்கி காசாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் ராசிபுரம் அருகே தொப்பப்பட்டி ஜேடர்பாளையத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய முருகேசன் இரவில் தனது அறையில் படுத்து தூங்கினார். நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அவர் கட்டிலில் படுத்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முருகேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் காதல் திருமணம் செய்த தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு காந்திநகரை சேர்ந்தவர் ரகுவரன் (வயது26). தச்சு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே சமீப காலமாக கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரகுவரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இரவு வீட்டின் சமையல் அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் ரகுவரன் தூக்குபோட்டு தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வளர்மதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரகுவரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×