search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநலம் பாதித்த வாலிபர்"

    • சின்னசேலம் அருகே மனநலம் பாதித்த வாலிபர் திடீரென இறந்தார்.
    • ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வெண்பிளான் இருந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மனநல பாதிக்கப்பட்ட ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வெண்பிளான் இருந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளார். கடந்த 17-ந் தேதி அன்று கனியாமூரில் நடந்த கலவரத்தால் அப்பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கலவரம் நடந்த அன்று முதல் இந்த ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வென்பிலானுடன் அப்பகுதியில் 4 நாட்களாக சுற்றி திரிந்துள்ளார். இவருக்கு உடல்நிலை மோசம் அடைந்ததால் சாலை ஓரத்திலே படுத்து கிடந்துள்ளார். இவரைப் பற்றி தகவல் தெரியாததால் அருகில் இருந்தவர்கள் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இவர் இறந்து போனார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×