search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி ராஜினாமா"

    பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேயுக்கும், அவரது கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் டொமினிக் ராப், சைலேஷ் வாரா, சூயல்லா, எஸ்தர் மெக்வே ஆகிய 4 மந்திரிகள் பதவி விலகினார்கள்.

    இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரி இப்போது பதவி விலகி உள்ளார். அவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ஆவார்.



    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் நிலையில், கலிலியோ செயற்கை கோள் திட்டத்தின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கூறி விட்டது. இதை தெரசா மேயும் உறுதி செய்துள்ளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இப்போது மந்திரி சாம் கியிம் பதவி விலகி உள்ளார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே வரைவு திட்டம் வெளியிட்டதில் இருந்து பதவி விலகியுள்ள 7-வது மந்திரி சாம் கியிம் ஆவார்.  #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
    பெண்களுக்கு ஆபாச மெஸேஜ்களை அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரி ஆன்ட்ரு கிரிபித்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். #AndrewGriffithsminister
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஆன்ட்ரு கிரிஃபித்ஸ். பர்டன் பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இதற்கு முன்னதாக கடந்த 2004-2006 ஆண்டுவாக்கில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அவை முன்னவராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில், பிரபல சமூக ஊடகமான ‘ஸ்னாப்சாட்’டில் இரு பெண்களை பின்தொடர்ந்து வரும் ஆன்ட்ரு, அவர்கள் பதிவு செய்த சில கருத்துகளுக்கு எதிராக ஆபாச பதில்களை பதிவிட்டு வந்துள்ளார்.



    அந்த பெண்களின் இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கடந்த மூன்றுவார காலத்தில் சுமார் 2 ஆயிரம் கருத்துகளை ஆன்ட்ரு பதிவு செய்தார். இவற்றில் பெரும்பாலனவை பாலியல் நோக்கம் கொண்டதாகவும், ஆபாசமாகவும் இருந்ததால் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் தெரசா மேவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். #AndrewGriffithsminister 
    ×