search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய புலனாய்வு அதிகாரிகள்"

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் கிடைப்பதற்கு அரிதான இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Chinesenational #Aadharcard #Nepalcitizen
    கொல்கத்தா:

    பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக நுழைவதற்கு மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டம் நுழைவு வாயிலாக உள்ளது.

    இந்நிலையில், இந்த மாவட்டத்தின் செவோக்கே சாலையில் இருக்கும் ஒரு ஓட்டலில் ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    அப்போது, சீனாவை சேர்ந்த புஹு வாங் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோர் இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால் என்பவர் மூலமாக இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    மேலும், புஹு வாங் மற்றும் கணேஷ் பட்டாராய் ஆகியோர் தங்களது பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய இந்திய ஆதார் அட்டைகளை வைத்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்த மோசடி தொடர்பாக இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால்,  நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோரை கைது செய்துள்ள அதிகாரிகள், சீனாவை சேர்ந்த புஹு வாங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கைதான பப்பாய் அகர்வால், கணேஷ் பட்டாராய் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். #Chinesenational #Aadharcard #Nepalcitizen 
    ×