search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய தேர்தல் குழு"

    பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் இன்று டெல்லியில் கூடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். #LSpolls #BJP #CECmeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 



    இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் போட்டியிடலாம் என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.

    பீகார், உத்தரகாண்ட், அசாம், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், அந்தமான் மற்றும் நிகோபார் சட்டசபை தேர்தல்களில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பான அடுத்த ஆலோசனை கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. #LSpolls #BJP #CECmeeting
    ×