search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு அனுமதி"

    • பெங்களூர் மெட்ரோ ரெயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது.
    • மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் செல்லகுமார் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூர் மெட்ரோ ரெயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.

    இதுதொடர்பாக நான் ஏற்கனவே பெங்களூர் மெட்ரோ ரெயில் நிறுவன தலைவர், கர்நாடகா முதல் மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது,

    இத்திட்டம், 2 மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரெயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால் குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும். இரு மாநில அரசின் பங்கேற்பு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு சேர்ந்து செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தினேன். தொடர்ந்து, தமிழக அரசு ஓசூர் மெட்ரோ ரெயில்வே திட்ட அளவீடு பணிக்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் கொள்கைகள், விதிகளை பார்க்கும் போது, இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த முடியாது என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை செயலாளரை நேரில் சந்தித்து இத்திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து உரிய ஆதாரம், ஆவணங்களுடன் பேசினேன்.

    இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 21&ந் தேதி, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர், ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து கொள்கை அளவில் ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது.

    எனவே, ஆய்வு பணிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல் அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் எந்த சூழ்நிலையிலும் கைவிட வாய்ப்பு இல்லை. மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் சேகர், மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் பாபு, மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, அக.கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×