search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர்கள்"

    • 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது.
    • மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லி சாணக்ய புரியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று நடைபெற்றது.

    பாரதீய ஜனதா கட்சியின் 2-வது ஆட்சிக் காலத்தில் இறுதியாக நடைபெறும் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும்.

    தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது. தேர்தல் தேதிகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் நலப்பணிகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாரதீய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. 

    அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி பிரசாரத்தை தீவிரப் படுத்தும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    மேலும் பாரதீய ஜனதாவின் 2-வது வேட்பாளர்கள் பட்டியல் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.
    • பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழிற்பூங்காவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிற்சாலை இயங்கும் முறை, நவீன எந்திரங்களின் பயன்பாடு, தொழிலாளர்கள் நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் தொழில் துறையினர் பலர் உடனிருந்தனர்.

    பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இதில் தொழில் துறையினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் திருப்பூர் பின்னலாடை துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.

    இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் நினைவு பரிசை வழங்கினார். தொடர்ந்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஏற்றும தியாளர் சங்கத்தினர், டையிங் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கினர்.

    பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது. வரும் சீசன்களில் இந்திய பருத்தி கழகம், அதிக அளவு பஞ்சு கொள்முதல் செய்து இருப்பு வைக்கவேண்டும். சந்தையில் விலை ஏறும்போது, கையிருப்பு பஞ்சை விடுவித்து விலையை சீர்படுத்த வேண்டும்.பின்னலாடை துறை சார்ந்த ஆராய்ச்சி மையத்தை திருப்பூரில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ×