search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிற்றவர்கள் கைது"

    • தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நேற்று நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு பகுதிகளில் மதுவிற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்

    தேனி :

    பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பகுதியில் தென்கரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொது கழிப்பறை அருகே மது விற்ற முத்துக்குமார் (வயது28) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் மது விற்ற முத்துப்பாண்டி (33) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கம்பம் வடக்கு போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றபோது அங்கு மது விற்ற அம்மாவாசி (42) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கம்பம் தெற்கு போலீசார் இ.பி. சாலையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் மது விற்ற காளியப்பன் (43) என்பவரை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டி போலீசார் ஏத்தகோவில் ரெங்கராம்பட்டி அருகே உள்ள பாறைக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ராமராஜ் (48) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் ெசய்தனர்.

    க.விலக்கு போலீசார் ரோந்து சென்றபோது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிைல பொருட்கள் விற்ற மகாராஜன் (48) என்பவரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ×