என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை அழகர் கோவில்"
மதுரை:
மதுரை வண்டியூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி ரகு (வயது 31).
இவரை சமீபத்தில் நேரில் சந்தித்த காமராஜர் நகரைச் சேர்ந்த செண்பகராமு என்பவர் “எனக்கு வண்டியூரில் சொந்தமாக நிலம் உள்ளது. இதனை 14 லட்சம் ரூபாய்க்கு விற்க விரும்புகிறேன். நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டு உள்ளார்.
உடனே ராஜபாண்டி ரகுவும் பல்வேறு தவணைகளில் 14 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து உள்ளார். இருந்த போதிலும் செண்பகராமு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. ‘அதோ தருகிறேன், இதோ தருகிறேன்’ என்று கூறி இழுத்தடித்து வந்தார்.
இதனால் ராஜபாண்டி ரகுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட நிலத்தின் பத்திர ஆவணங்களை சோதனை செய்து பார்த்தார். அப்போது அந்த நிலம் மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டி, இதுதொடர்பாக செண்பகராமுவிடம் நியாயம் கேட்டார். இதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே ராஜபாண்டி ரகு கொடுத்த ரூ.14 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டார். அதற்கு செண்பகராமு மறுத்து விட்டார்.
ராஜபாண்டி ரகு இது தொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்