search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடைகளை"

    • கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுவதால் அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இந்த நாட்களில் மதுக்கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுவதால் அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாவது:-

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் வல்வில் ஓரிவிழா நடைபெறும் தினங்களில் கொல்லிமலை வட்டத்திற்கு உள்பட்ட செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களில் மூட வேண்டும். இந்த நாட்களில் மதுக்கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×